Sunday, 14 January 2024

குறள் 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.  

பேச்சு : 

இனிய சொல்
தாழ்ந்த குரல்
இதயம் வெல்லும்!

பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலே புரிந்துகொள்ளாமலே முழு வாழ்க்கையை கழித்துவிடுகிறோம். நான் பேசினால் ஒரு பயல் கேட்பதில்லை என்பவர்கள் தங்கள் வார்த்தைகளை உற்று நோக்குங்கள். என் பேச்சிற்கு மரியாதை இல்லை என்பவர்கள் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள்.  சுடாத வார்த்தைகளா அவை?

Wednesday, 10 January 2024

ஹைக்கு - 2

        (1)

சிதறக் 
காத்திருக்கும்
உடைந்தக்
கண்ணாடி 
துண்டுகளா
நாம்?

         (2)

படித்தால்
சுதந்திரம்
கிடைக்கும்
என நம்பாதே!

நீ அடிமை தான்

அப்பாவுக்கு
அண்ணனுக்கு
கணவனுக்கு
குழந்தைகளுக்கு

விலங்குகள்
திறக்கப்படுவதில்லை

சொந்தம்
பந்தம்
கைகளில்
உன் விலங்கின் 
சாவி!.

Monday, 8 January 2024

கோபம்

கோபங்கள் ஏனோ ?
உரிமையினாலா ?
ஊடலினாலா ?
எண்ணங்கள் சொல்லி,
விடைகளை தேடி,
ஊடலை களைவாயா ?
உரிமைகள் தொடர்வாயா ?

பருவம் தப்பிய பயிர்,
கனலில் கருகலாமா ?
கருணைமழை பொழியலாமே !❤️❤️

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...