Wednesday 30 November 2022

#குறள்_1105 : வேட்ட பொழுதின் அவையவை போலுமே,தோட்டார் கதுப்பினாள் தோள்.

உன் விரல்கள் 
மீட்டும்
வீணை இசையை
தினந்தோறும்
கேட்கலாம்
திகட்டாது
ஆனால்
உன் தோள்
சாய்ந்து அதை
கேட்கும்போது
இன்னொருமுறை
ஜனனிப்பேன்
உன் இடப்புற தோள்
காலியாகத்தானே
இருக்கிறது
என்னையும்
ஏந்திக்கொள்
மறுத்தால் 
நீதிமன்றம் 
செல்வேன்
இடஒதுக்கீடு கேட்டு!

Monday 28 November 2022

#குறள்_1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்,தாமரைக் கண்ணான் உலகு.

என் இறைவனின் 
இடையை கட்டிக்கொண்டு
அவன் புஜங்களில்
தலைவைத்து துயிலும்
கணங்களை விடவா
இனிமையானது
ஈசன் படைத்த உலகு?

(அதென்ன வள்ளுவர் எப்போது பார்த்தாலும் பெண்ணைப் பற்றியே புகழ்கிறார். No Partiality)

Saturday 26 November 2022

செல்ஃபி

நான் என்ன
நகையா கேட்டேன்
விலைமிக்க
ஆடையா கேட்டேன்
அன்றாடம் தவறாது
செல்ஃபி கேட்டேன்
அதை அருள்வதில்
உனக்கேதும்
தடை உளதோ?

#குறள்_1101# குறள்: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்,ஒண்தொடி கண்ணே உள.

கடல் அழகு மலை அழகு என்பர்
காதலி உனைக் காணாதோர்!
குழல் இனிது யாழ் இனிது என்பர்
கண்ணே உன் குரல் கேளாதோர்
மல்லிகைக்கு வாசம் உன்
தலைசேர்ந்த பின்புதான்
ஜிலேபி உன் எச்சில்பட்டபின்
அதிகமாய் இனித்தது
உன் மெய்யே பேரின்பம்
உலகத்துக்கே சொல்லிவைப்பேன்!

நிலம் உன் உடல்
நீர் உன் கண்கள்
காற்று உன் சுவாசம்
ஆகாயம் உன் கூந்தல்
நெருப்பாய் உன் நினைவுகள்
என் ஐம்பூதங்களும் நீ!

Thursday 24 November 2022

துப்புரவு தொழிலாளி

பகல்முழுதும்
சாலை சாக்கடை
சுத்தம் செய்தவன்
தன்னுடல் எங்கும்
அழுக்காய் திரிகிறான்
டாஸ்மாக் பரிசு
நடையை தளர்த்தும்
குடும்பம் வளர்கிறதோ
இல்லையோ டாஸ்மாக்
வளர்ச்சி அபாரம்
தன் கழிவறையை
தானே சுத்தம் செய்த
காந்திகள் இல்லாத
தேசத்தால் இந்த வேலை
ஸ்கேவஞ்சர் மெசின்
எல்லா தேர்தலிலும்
வாக்குறுதி பறக்கிறது
கோடீஸ்வரனுக்கு மானியம்
கோடிக்கணக்கில் போகிறது
உனக்கு மெசின்
வாங்கத்தான் அரசிடம்
காசில்லை
இருந்தாலும் நீ தனவான்
உன் காசு தானே
பலருக்கு ஊதியம்
அதென்ன உன்பெயர்
கருப்புசாமி வெள்ளைசாமி
என்றே ஒலிக்கிறது
அய்யர் அய்யங்கார்
முதலியார் செட்டியார்
கேட்டதேயில்லை
பெரியாரே மீண்டும் வா
பாரதியே பிறந்து வா
உங்கள் கடமை
இன்னும் பல உண்டு!

வரவேற்பு

போர்கண்ட சிங்கமே
வருக வருக
வாழும் பாரதியே
வருக வருக
கொள்ளையரை எதிர்க்கும்
பகத்சிங்கே வருக

பாழடைந்த கிராமத்துவீட்டை
பட்டணத்து பேரன்
பார்வையிட போனதுபோல
வெள்ளையரை எதிர்த்த
பாட்டன்கள் வாழ்ந்தவீட்டை
கடலூர் சிறையை
கொள்ளையரை எதிர்க்கும்
பேரன் நீ பார்க்கபோனாயோ
65 நாட்கள் அடைபட்டு
ஆசி  வாங்கிவந்தாயோ

வெள்ளுடை வேந்தன்
வெண்தாடி வீரன்
பெரியாரின் வாரிசாய்
நீதிமன்ற வாசலில்
நிற்க கண்டேன்
நீதிகேட்டு போனாயா
இல்லை
நீதித்துறைக்கே பாடம்
புகட்ட போனாயா

மதுரை மன்ற நீதிதேவதை
மெதுவாக கிசுகிசுத்தாள்
சட்டம் படிக்காமல்
இத்தனை பேசுகிறானே
சட்டம் படித்திருந்தால்
நீதிதராசை என்னிடம்
இருந்து பிடிங்கியிருப்பான்
அவளின் பாராட்டு
நீதியரசர்களுக்கு
பொறாமையை தந்திருக்கும்
அதனாலோ என்னவோ
உனக்கெதிராய் நீதிவழங்கினர்

I standby what I said
இந்த சொல்லாடல்
மந்திரமானது
இளைஞர்கள்மனதில்
சொக்கித்தான் போனார்கள்
சொல்வேந்தன் துணிவு கண்டு!

மன்னிப்புகேட்கமறுத்து
பிடிவாதமாய் நின்றது
மக்களின் மனதில்
மன்னனாக வைத்தது

மதத்தால் சிதறுண்ட
இந்தியாவை இணைக்க
ராகுல்காந்தி என்ற
ஒற்றைசொல்
போதுமானதாய்
இருப்பது போல
இடத்தால் சிதறுண்ட
எங்களை இணைக்க
சவுக்குசங்கர் என்றபெயர்
போதுமானதாய் இருந்தது
பெயரே தெரியாமல்
முகமே அறியாமல்
மனதால் இணைந்து
அண்ணனாக அக்காவாக
தம்பியாக தங்கையாக
வாராவாரம் உன் புகழ்
மறவாது பாடினோம்
ஒவ்வொருவர் குரலிலும்
உன் பெயரே ஒலித்தது
இடையில் சில உபிக்கள்
மிதிபட்டும் சென்றனர்

Any updates any updates
எல்லோர் DM லும் ஒரே கேள்வி
எப்ப வரார் எப்ப வரார்
எல்லோர் வாயிலும்
இதே கேள்வி
அவர் நலமா அவர் நலமா
அனைவரும் கவலைப்பட்டனர்
உன்னைநோக்கி உலகையே
சுழல வைத்தாய்
Twitter ல் Trendingஆய்
உன் பெயரே மிதந்தது

எங்கள் மனதை
ஆட்டிபடைத்த
மந்திரக்காரன் நீ 
மாயக்கண்ணன் நீ

அலிபாபாவும் 40 திருடர்களும்
மறுபடியும் புகழ்பெற்றது

நிலசுரண்டல் நிதிசுரண்டல்
நீதிசுரண்டல் அனைத்துக்கும் எதிராய்
உன் கர்ஜனை தொடரட்டும்
வளரட்டும் உன் ஆயுள்
வாழட்டும் உன் புகழ்










Friday 18 November 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கபடில்லா நட்பு
கழுபிணியிலாத உடல்
சலியாத மனம்
தாளாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா  வாழ்வு
அத்தனையும் பெற்று
வாழ்வாங்கு வாழ்க!



உன் இதயத்துடிப்பை
கேட்டு பழக்கப்பட்ட பேனா
மை திறவாமல்
மௌனியாய்  இருக்கிறது


உனக்கு தெளிந்த பார்வை
தந்த கண்ணாடியோ
தூசி படர்ந்து தூங்குகிறது



நீ விரும்பி அணியும்
டைட்டன் வாட்ச்
ஓட விருப்பமின்றி
உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் மணிக்கட்டின்
பல்ஸ்  கேட்டுத்தான்
விழிப்பேன் என்று
வீம்பாய் படுத்திருக்கிறது

ரெக்கார்டிங் ரூம் கேமரா
கண்ணிமைக்காமல்
காத்திருக்கிறது
உன்னை மட்டுமே
படம் பிடிப்பேன் என்று!



உன் வாய்வழி பிரசவிக்க
ஊருக்குள் பிரச்சினைகள்
பல பதுங்கி கிடக்கின்றன
திருவாய்மொழி அலசும்
அத்தனை பிரச்சினையும்
தீர்வை நோக்கி நகர்கிறதே!


அமைச்சரும் அதிகாரியும்
ஆசுவாசமாய் திரிகின்றனர்
உன் கர்ஜனை கேட்காமல்
அறுபத்தைந்து நாட்களாய்
அமைதியாய் உறங்குகின்றனர்

எப்போது வருவாய்
ஏக்கத்தில் ரசிகர்கள்

யூ  ட்யூபும் புளித்தது
உன் குரல் கேட்காமல்
ட்விட்டரும் கசந்தது
உன் பதிவுகள் இல்லாமல்
நீலப்பறவை அன்றாடம்
புலம்புகிறது
என் நாயகன் எப்போது
வருவான் என
கடலூர் வந்து உனை
கேட்டதாமே
அவ்வளவு உறவா
அந்த நீலப்பறவை உனக்கு


போகட்டும் விடு
அத்தனையும்
சீக்கிரமாய் வந்துவிடு
செவி இன்பம் தந்துவிடு.
                 -  பிரியமான தோழி
                     சு.தெய்வானை

Tuesday 15 November 2022

#குறள்_1090 : உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்,கண்டார் மகிழ்செய்தல் இன்று

உண்டால் மயக்கம்
கண்டால் மயக்கம்
முதலாவது குளிர்ச்சி
இரண்டாவது கிளர்ச்சி
கள் குடித்தால்
நிலைதடுமாறாது
காதலி அவளை கண்டால்
மனம் நிலைகொள்ளாது
கருப்புவெள்ளை கள்ளே
காவியம் படைப்பது!
நீள்வட்ட பானைக்குள்
இருந்துகொண்டு
நித்தமும் போதை தருவது

Monday 14 November 2022

#குறள்_1089 : பிணையேர் மடநோக்கு நாணும் உடையாட்,கணியெவனோ வேதில தந்து

கண்களால் போரிட்டு
நாணத்தால் எனை
மண்டியிட வைப்பவளுக்கு
வைரமாலை எதற்கு?
ஓ எனக்கு முன்னர்
அதை சிறைபிடித்தாயோ
இருந்தாலும் அம்மாலை
அதிர்ஷ்டமிக்கது
என்னைமுந்திக்கொண்டு
உனை தழுவிக்கொண்டதே!

Sunday 13 November 2022

#குறள்_1082 : நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு,தானைக்கொண் டன்ன துடைத்து

இடதாய் தலைசாய்த்து
குறும்பாய் பார்த்து
மனதுக்குள் மழை தந்தாய்
இடுப்பில் கைவைத்து
முழுதாய் முறைக்கையில்
நானொன்றும் செய்யலடி
கதற வைத்தாய்
வலப்பக்கம் திரும்பி
எங்கோ வெறிக்கையில்
சாரிடி சாரிடி நூறுமுறை 
சொல்லவைத்தாய்
கண்கள் சந்தித்த
நொடிப்பொழுதில்
தீராத நோயுற்றேன்
பாவம் நான் விட்டுவிடு!
எத்தனை முறை 
போர்தொடுப்பாய்
எத்தனை வகை
சேனை வைப்பாய்.


#குறள்_1083 : பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்,பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எமனும் அவளும்
ஒரு ஜாதி
என்னை கொல்வதில் 
சரிஜோடி
வாழ்ந்தது போதும்
வா என்றான்
வாழ்ந்து பார்ப்போம் 
வா என்றாள்
கருத்த உருவம்
கயிறை வீச
கரியவிழிகளோ
வேலை வீசின
இருவரும் எனக்கு
நிம்மதி தருவர்
ஏனோ என்மனம்
கருவிழியை சேர்ந்தது

(2)
கொஞ்சியும் கெஞ்சியும்
நிதானமாக கொல்வாள்
நித்தமும் முத்தம்
சொர்க்கவாசல்
நித்தமும் யுத்தம்
மரணவாசல்
இன்ஸ்டால்மென்டில்
இனிப்பும் கசப்பும்
எமனே காதலியாய்
எனை ஆளவந்தது

#குறள்_1085 : கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்,நோக்கமிம் மூன்று முடைத்து.

(1)
எமனே பெண்ணே
உங்களுக்குள் போட்டியா
என்மீதே கண் 
இருவருக்கும்
யார் உயிரை 
முதலில் எடுப்பது என்று!

(2)
எமனின் விருந்தினரை
கருணைக்கண்களால்
காப்பாற்றிய தேவதை

-எமன் கண் பெண்
ஒட்டவைப்போம்ல!

#குறள்_1086 : கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்,செய்யல மன்இவள் கண்.

கோபம் வழிகின்ற
தாபம் தருகின்ற
கண்ணிடமிருந்து
எனை காப்பாற்ற
புருவமே உனக்கு
கையூட்டாக
லேக்மீ மை தரவா
நைக்கா மை தரவா
அவள் கண்கள்
எனை திண்ணும் முன்
கரைசேர்த்து காப்பாற்று!
கண்களுக்குத்தான்
கருணையில்லை
வில்லே உனக்குமா?

முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கினதலைமுடி சான்ற தந்தழை உடையைஅலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு.

பெரிய மனுஷி
ஆயிட்டே
ஊர்சுத்த 
போவாதடி
முற்றத்தில்
இருந்து
மூதாட்டியின்
கதறல்!

#குறள்_1087 : கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்...படாஅ முலைமேல் துகில்.

முகப்படாம் 
பிளிறின் வழியை
நேராக்கும்
அங்கனம்
முகடுகளை
மூடுபனியால்
மறைத்து
வேலையை பார்
என்கிறாளோ
பாகனும்
பாவையும்
ஸ்ட்ரிக்ட்  டீச்சர்ஸ்
கவன சிதறலை
சீராக்குபவர்கள்

குறள்_1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்,நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களம் வெல்லும்
என் வலிமை
உன் நெற்றிக்களம்
நோக்கி நடுங்குவதேன்
பகைவனின் பரந்த
களம் காட்டிலும்
உன் நுதல்களம்
சிறிதுதானே
கேசங்கள் ஒவ்வொன்றும்
உனைகாக்க போரிடுமோ
கிட்டவரும் ஆடவரை
சூரியகண்கள் எரித்திடுமோ
வலிமைமிகு என் கைகள்
வழுக்கி விழுந்து
உடைந்திடுமோ
இத்தனை மென்மை 
ஏன் வைத்தாய்

Tuesday 8 November 2022

பார்வை

இடதாய் தலைசாய்த்து
குறும்பாய் பார்த்து
மனதுக்குள் மழை தந்தாய்
இடுப்பில் கைவைத்து
முழுதாய் முறைக்கையில்
நானொன்றும் செய்யலடி
கதற வைத்தாய்
வலப்பக்கம் திரும்பி
எங்கோ வெறிக்கையில்
சாரிடி சாரிடி நூறுமுறை
சொல்லவைத்தாய்
கண்கள் சந்தித்த
நொடிப்பொழுதில்
தீராத நோயுற்றேன்
பாவம் நான் விட்டுவிடு!
எத்தனை முறை
போர்தொடுப்பாய்
எத்தனை வகை
சேனை வைப்பாய்.

Monday 7 November 2022

#குறள்_1081 (அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் ) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை,மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

மழை கண்டு ஆடும்
மயிலின் அசைவும்
மாதுவின் காதோரம்
காதணியின் அசைவும்
வாக்கு கேட்பதேன்?
ஓருள்ளம் உள்ள நான்
யாரை தேர்ந்தெடுப்பேன்!
மயில் அழகு என்றால்
மாது மனம் வாடாதா
மாதுவே அழகு என்றால்
மயில் தோகை சுருங்குமே
பாப்பையா கொஞ்சம்
தீர்ப்பு சொல்லுங்களேன்!

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...