Thursday 29 December 2022

குறள் : 1134

நகரம்
விழுங்கிய
சுனாமி
கண்டேன்!

பயிர்கள்
விழுங்கிய
கஜாவை
கண்டேன்!

மரங்களை
சரித்த
வார்தா
கண்டேன்!

ஆணை
விழுங்கிய
காதல்
கண்டேன்!

நாணம்
விழுங்கிய
காமம்
கண்டேன்

குறள்: 1133

திமிர் பிடித்த
அரசு காளையை
திண்டு பிடித்து
அடக்கினாய்!

சக்கரம் ஒடிந்த
சமூகநீதி தேரை
சொல்கயிற்றால்
இழுத்துவந்தாய்!

ஊர் ஓரம் நின்ற
தராசு தேவதையை
ஒரு கையால்
தூக்கினாய்!

பலராமன் நீ
பஞ்சுமூட்டை
எனை அள்ள
பலநேரம்
யோசிப்பதேன்?

முத்தம் நிரம்பிய
தலையணையை
மூடி வைத்து
ரசித்தவன்
முத்தம் நூறு
தந்ததால்
மூச்சுமுட்டி
சாய்ந்தவன்

வெட்கம் விடுத்து
வருவானோ
வெண்ணிலாவை
தொடுவானோ

மடலேறி
வருவானோ
வானூர்ந்து
வருவானோ

வழிமீது
விழிவைத்து
வண்ணமயில்
காத்திருந்தேன்!



Tuesday 27 December 2022

குறள் : 1132


காதல் சொல்ல
வழியின்றி
காணும் இன்பம்
துளியின்றி
ஊமை கண்ட
கனவாய்
எவ்வளவுதான்
பொறுப்பது?
மயக்கும்விழி
பாராமல்
மங்கை உனை
தீண்டாமல்
வாழ்தல்
ஒரு வாழ்வா?
மடலேறும் வழி
அறியேன்

நண்பனே!
மாமனின்
எண்ணைக்கொடு
மச்சானின்
விலாசம் கொடு
மணம் பேசி
முடித்து
மறுவேலை
பார்ப்பேன்!

Monday 26 December 2022

குறள்: 1130

புரோட்டானும்
எலக்ட்ரானும்
நானும்
அவரும்
சிவப்பு அணு
வெள்ளை அணு
இருவரும்!

ஒருவரின்றி
அடுத்தவரில்லை

உள்ளிருந்து
ஆட்சி செய்யும்
அழகு கண்டீரோ?
காணும் காட்சி
உண்ணும் உணவு
உடுத்தும் உடை
ஒவ்வொன்றிலும்
என் தலைவன்
உறைந்திருப்பதை
யாரறிவார்?
ஒவ்வொரு நொடியும்
நினைவில்
ஆள்வது
யாரறிவார்?

ஊனக் கண்ணில்
படவில்லை என
பிரிந்தாரென
உளறாதீர்!

Sunday 25 December 2022

பாஜக நாடகங்கள்

கூட்டத்தில் பேசும்போது
முக கவசம் இல்லை!
தேர்தல் பேரணியில்
தீதீ......ஓ... தீதீ.... என்று
கூவியபோது கொரானா
என்ன கொத்துபராட்டா
சாப்பிட போனதா?
கும்பமேளாவில்
லட்சம் சாதுக்கள்
கலந்து குளித்தனரே
அப்போது கொரானா
சுற்றுலா போனதோ?
அமெரிக்க அதிபர்
ட்ரம்ப்பை கூப்பிட்டு
லட்சம் பேரை
மைதானத்தில்
கூட்டினீர்
அப்போது கொரானா
கிரிக்கெட்
விளையாட போனதா?
முதல்அமைச்சர்களின்
Zoom மீட்டிங்கில் Online
பேசும்போது
முக கவசம் எதற்கு?
பாராளுமன்றத்தில்
பாதுகாக்கப்பட்ட
கட்டிடத்துக்குள்
முக கவசம் எதற்கு?
மக்கள் என்ன
முட்டாள்களா?
கொரானா இவர்களின்
விருப்பபடி
இயங்குமா?
பள்ளிசெல்ல
விருப்பமில்லாத
குழந்தை பல்வலி என
நடிப்பதை போல
பாஜக நடிப்பதேன்?
கொரானா பாஜக வின்
மாமனா மச்சானா??
அவர்கள் பேரணிக்கு செல்லாது
பாரத ஒற்றுமை பயணத்தில்
மட்டும் அது கலந்துகொள்ளுமா?
பாராளுமன்றத்தில் பகலில்
கலந்துகொள்ளும் கொரானா
இரவில் நண்பர் வீட்டு
திருமணத்தில்
கலந்துகொள்ளாமல்
ஓய்வெடுக்க போய்விடுகிறது.
உங்கள் நாடகங்கள்
எங்களிடம் செல்லாது!
கொரானா தீவிரம்
அறிந்து பிரதமருக்கு
முதலில் கடிதம்
எழுதியவர் ராகுல்ஜி!
பாதுகாப்பு விதிமுறைகளோடு
இந்திய ஒற்றுமை பயணம்
தொடரும்!

Saturday 24 December 2022

குறள்_1129: இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே,ஏதிலர் என்னும்இவ் வூர்.

இமைகள்
மூடினால்
அவருக்கு
உறுத்தும்
என நினைத்து
இமைக்காமல்
இருந்தேன்
வெளிச்சம்
கிடைக்காமல்
பூக்களை
பார்க்காமல்
நதியை
ரசிக்காமல்
அலைகளை
காணாமல்
கஷ்டப்படுவாரே
அதற்காக
விழித்தேன்
அவர் என்ன
கடுங்காவல்
கைதியா
காற்றோட்டமில்லாத
அறையில்
பூட்டிவைக்க
அதனால்
இமைக்காமல்
இருந்தேன்!
இந்த ஊரார்
அதுபுரியாமல்
என்னை
தூங்கவிடாமல்
கொடுமை
செய்வதாக
அவரிடம் 
வம்பு பேசலாமா?

Media in Nation building

Indian opinion
Nav jeevan
Harijan
Young India
carried issues
and stories
Written by Gandhi

National Herald
United Indians
Shared the pains
And struggles
Of fighters
Nehru was editor

Keshri in marati
Marata in english
Dailies of Tilak
Spread the news of
Freedom fighters
During british raj

The Hindu
Sudesa mitran
Was decorated
By Bharathi

So nation was built
By media too
Along with leaders
When they were jailed

Goswami & choudhry
So called patriots
sensationalise Issues
just for TRP
Shouting is
Not journalism
Who will teach them?
Money buys editors
Power buys journalists
Who is escaped
Literally no one

But there is a man
Of present times
At prime time
Having accuracy
Accountability
Humanity
Impartiality
independence
Yes he is Ravish Kr
He discussed varying issues
Like politics
Economy
Education
Unempqloyment
Inflation
Healthcare system etc.
Power has tried
To buy him
Intimidated manytimes
But he refused to buckle
Infront of money
And power

Independence of judiciary
is affected by corruption,
Interference of executives and
legislature of govt
Non transparency in
appointment of judges
Influence of political parties
Dominating environment
created by powerful entities




   

Rahul is Coming!

Rohith Vemula hear me
Don't get upset that
Your voice has been silenced
Rahul is speaking
Social justice on the way
Wait for few months
Rahul is coming!
Dear friend Siddhique kappan
Start your celebration 
You will be freed soon
Release order on the way
Rahul is coming!

Dear sister Bilkis banu
Wipe out your tears
Once again they will go
Inside the prison bars
You will get justice
Rahul is coming!

Dear sister Gauri Langesh
Rest in peace
Your shooters are in fear
A lion is roaring
Free press on the way
Rahul is coming!

Farmer uncles don't cry
You will get MSP
you will get cold storage
You will get financial help
Your son is on the way
Rahul is coming!

Dear corrupt Judges
Election commission officers
Please do job search
You will be fired soon
Boss is on the way
Rahul is coming!
                               
Shri Rahul Gandhi's
Achamillai!  Achamillai!
I am not afraid, I am not afraid 
Even if ED steps in
I am not afraid,  I am not afraid, 
Even if bjp people bully me, 
And tell things bad about me, 
I am not afraid,I am not afraid 
Even if they buy all mla's 
And change the govt to fallout, 
I am not afraid,I am not afraid 
Even if  all my friends leave 
Due to their greeds
I am not afraid,I am not afraid


Friday 23 December 2022

குறள்: 1128

ஆறிப்போன டீ
ஆடைவிழுந்த காபி
விறைத்துபோன
இட்லி தோசை
கெட்டியான
மேகி நூடுல்ஸ்

இவற்றை
சாப்பிடும்போது
ருசியில்லை
என்றாலும்
இதயத்தில்
வாழும்
அவனுக்கு
சுடாமல்
இருக்கும்
என்ற நினைவு
ருசியை
அதிகரித்தது!

காலை காபி
சுட்டதா
அன்பரே?

Thursday 22 December 2022

குறள்_1127:கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

கண்ணன்
இருக்கை
கண்களில்
என்பதால்
கவனம் பல
கொண்டேன்
மையிட்டால்
கண்கரித்து
அவனுக்கு
கண்ணீர்
வருமோ?
யோசித்து
தவிர்த்தேன்!
சிகைக்காய்
தேய்த்து
குளித்தால்
அவன் கண்
எரியுமென்று
அரப்பை
தேர்ந்தெடுத்தேன்!
கண்ணுக்கு
நல்லதென
கேரட்டும்
பப்பாளியும்
தேடித்தேடி
சாப்பிட்டேன்!
வெயிலில்
அவனுக்கு
கண்கூசும்
என்று
கலைஞரிடம்
கண்ணாடி
கடனாக கேட்டேன்
வெளியே சென்று
திரும்பிவந்து
வெள்ளரிக்காய்
ஒத்தடம்
கண்ணனுக்கு
தந்தேன்!
இதற்கெல்லாம்
பரிசாக
உன்னையே
தருவாயா???

Friday 16 December 2022

100 DAYS OF YATRA

#100DAYSOFYATRA
நாட்களா
நகர்ந்தது?
இல்லை
பாஜகவின்
இதயம்
நகர்ந்தது!
தூரங்கள்
முடிந்ததா?
இல்லை
மக்களிடையே
பகைமை
முடிந்தது!
மாநிலங்கள்
மட்டுமா
கடந்தார்?
மக்களின்
மனதையும்
கடத்தினார்
ராகுலின்
பாதங்கள்
நடந்த அடிகளை
காட்டிலும்
கூடுதல்
அல்லவா
அவர் சந்தித்த
மக்களின்
எண்ணிக்கை!
நூறு ஆயிரமாகி
லட்சமாகி கோடியாகி
எண்ணமுடியா
இலக்கம்
எட்டியதை
எதிரிகளின்
கதறலில்
அறியமுடிந்ததே!

அன்பு தலைவனே
உன் சட்டையும்
செருப்பும்
பேசுபொருளாக
புன்னகையால்
எப்படி கடந்து
போகமுடிந்தது!
அன்னை சோனியா
பாலுக்கு பதிலாக
பொறுமையை
ஊட்டினாரோ

காங்கிரஸ்
இல்லாத
பாரதம்
என்றோருக்கு
பாரதம்
முழுக்க
காங்கிரஸ்
மட்டுமே
என்று எதிரிக்கு
உணர்த்தியது
உன் பின்னே
வந்த மக்கள் வெள்ளம்!

விளைபொருள்
விலை கிடைக்காத
விவசாயிக்கு
நீ விடிவெள்ளி
ஆனது
உலகம் அறிந்தது!

இந்த நூறு
நாட்களில்
தலைவா
நீ பேசாத
பொருளுண்டோ?
கலாச்சாரம்
மொழி மதம்
பொருளாதாரம்
விலைவாசி
வேலையின்மை
அத்தனையும்
நகநுனியில்
வாய்மொழியில்
திரையின்றி
காகிதமின்றி
திகட்ட திகட்ட
எதிரிகள்
திகைக்க
பேசினாய்

உன்னை அளவின்றி
நேசிக்கிறோம்
இறைவனாய்
பூஜிக்கிறோம்
உன் சரித்திரம்
நிலைக்கட்டும்
சாதனை நீடிக்கட்டும்!

Wednesday 14 December 2022

#குறள்_1129 :மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்,பலர்காணத் தோன்றல் மதி. 

இந்தாம்மா
நிலாப்பொண்ணு
இது ஒரு மூஞ்சினு
தூக்கிட்டு
மாசத்துல
பதினஞ்சுநாள்
வந்து நிக்கிற
உனக்கெல்லா
வெக்கமே
இல்லியா
என்னிக்காச்சும்
எம்பொஞ்சாதி
மூஞ்சி பாத்துக்கீறே?
அல்லிபூ கண்ணழகி
ஆவாரம்பூ  நிறத்தழகி
அவ இருக்கும்போது
வெளியில வரலாமா
ஓடிப்போ வூட்டுக்குள்ள
ஈனமானம்
உனக்கிருந்தா!

Tuesday 13 December 2022

#குறள்_1118 : மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,காதலை வாழி மதி.

அதிகாலை
ஐந்தரைக்கு
Good morning di
அடுத்த ஒருமணி
நேரத்தில்
என்னடி பண்றே
குறுஞ்செய்தி
திரையில் கண்டு
ஜொலிக்கும்
என்னவளின்
முகம் விடவா
நிலவே நீ
பிரகாசித்துவிடமுடியும்
அப்படி நடந்தால்
அவளோடு
சேர்த்து
உன்னையும்
நேசிப்பேன்!

Friday 9 December 2022

#குறள்_1114 : காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்,மாணிழை கண்ணொவ்வேம் என்று. 

சன்னமாய்
தலைகவிழ்ந்த
குவளையை
கண்டதும்
உறுதிசெய்தேன்
நீ இந்தவழியில்
பயணித்திருக்க
வேண்டும் என்று!
உன் கண்களை
கண்டு அதற்கு
காய்ச்சல் வந்ததோ!
கண்ணாடி கண்களின்
ஒளிபட்டு கூசி
தலைகவிழ்ந்ததோ!
உன் கண்களால்
பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே
போகிறது!

Thursday 8 December 2022

குறள் - 1113 : முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்,வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

என்னவளே
மூங்கில்
நேற்று
முறையிட்டது
உன் அழகிய
தோள்களுக்கு
முதல் பரிசாமே
பாவம் மூங்கில்
ஆறுதல் பரிசும்
தவறவிட்டதாமே
இணைப்பு
கணுக்கள்
இறக்கிவிட்டனவோ
மூங்கிலுக்கு பரிசை
ஜூரியில் என்ன
காவிக்காரர்களா
பச்சை நிற
மூங்கிலை தவிர்த்து
உன் மஞ்சள்
நிற தோளை
தேர்வு செய்தனர்
என்னை போலவே
அவர்களும்
உன் தோள்வழி
வழுக்கிவிழுந்தனரோ

முத்து வந்து
என்னிடம்
கேட்டான்
உன் காதலி
எத்தனை வருடம்
சிற்பிக்குள்
இருந்தாள்
இவ்வளவு
வெண்மையாய்
அவளின் பற்கள்
கடலோரத்தில்
உன் சிரிப்பை
பார்த்தானோ

நந்தியாவட்டையுடன்
என்ன தகராறு
அது வந்து
சிலிர்த்தது
நான்தரும்
மையால் தான்
உன்காதலியின்
கண்கள் அழகானது
மறக்கவேண்டாம்
என்று சொல்ல
சொன்னது

பஞ்சுவும்
இழுத்தது
பஞ்சாயத்து
உன் மேனி
அதைவிடவும்
மென்மையாமே

என்னை மட்டும்
வதைக்காமல்
எல்லோரையும்
மல்லுக்கு
அழைக்கிறாய்
நான் எத்தனை
பேரை சமாதானம்
செய்வேன்?

Wednesday 7 December 2022

குறள்_1112 : மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்,பலர்காணும் பூவொக்கும் என்று.

வள்ளுவரே
உம் பாட்டில்
பொருட்பிழை
உண்டு!
இருநாளில்
வாடும்
சாதா மலரோடு
என்னவளின்
கண்மலரை
எங்ஙனம்
ஒப்பிடலாம்?
உயிர்தந்து
உயிர்நீக்கும்
ஜீவமலரை
குறைத்து
கூறலாமா?
நோயாகி
மருந்தாகும்
அற்புதம்
அன்றோ
அவள்கண்கள்!
விரகமாகி
விருந்தாகும்
உணவன்றோ
அவள் கண்கள்!
பிழையை திருத்து
இல்லையேல்
பொற்றாமரை
குளத்தில்
மீண்டுவர
நேரிடும்!

Tuesday 6 December 2022

குறள்_1110 :அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்,செறிதோறும் சேயிழை மாட்டு.


River & Woman : 

You never touch 
the same water twice
because flow is changing
every second in a river!
same as my lady love
who refresh me differently
one after another day!

#குறள்_1111# நலம்புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்,மென்னீரள் யாம்வீழ் பவள்.

மென்மையும்
வண்ணமும்
உனக்கு தான்
என்றெண்ணி
கர்வம் கொள்ளாதே
அனிச்சமே!
உன்னை வெல்லும்
மென்மை
என்னவளின்
உதட்டிற்கு உண்டு!
அவளின்
கருநீல கண்
தங்கநிற தோள்
தும்பை பல்
விடவா உன்
வண்ணம் அழகு
உன் ஐந்திதழை
காட்டிலும்
அவளின்
செவ்விதழே
சிறந்தது!
கர்வத்தை
குறைத்து
என்னவளை
துதி பாடு!

Thursday 1 December 2022

#குறள்_1106 : உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு,அமிழ்தின் இயன்றன தோள்.

அமுல்
ஆவின்
எந்த பாலில்
குளிக்கிறாய்?
தொட்டதும் 
புத்துணர்ச்சி
விலைமிகுந்த
நீ குளிப்பதால்
பால்விலை
விண்ணை 
தொடுதோ?

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...