Showing posts with label Social. Show all posts
Showing posts with label Social. Show all posts

Thursday 3 February 2022

வேலைக்கு போகும் பெண்ணின் மனநிலை

காலையில் என்னடா வாழ்க்கை என்று தோன்றியது. வேலைக்கு போகவேண்டாம் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனி என்று சொல்லும் ஆண் தெய்வமாக தெரிந்தான். வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு எத்தனை சவால்கள்?. சீ என்ன பிழைப்பு பிழைக்கிறோம் என்று ஆத்திரமும் அழுகையும் வந்தது. கண்ணீர் வழிந்து சாப்பாட்டு தட்டில் விழுந்தது. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு, சம்பள உயர்வுக்கு STC பண்ண வேண்டாம், APAR ல் 100 மார்க் வரவில்லை என்று DD யிடம் கெஞ்ச வேண்டாம். M.Tech பண்ண வேண்டாம், phd பண்ண வேண்டாம், paper publications ஆகவில்லை என்று கவலை பட வேண்டாம். சரியான நேரத்தில் முக்கியமான தகவல் சொல்லாமல் கழுத்தறுக்கும் colleague நினைத்து வருத்தப்பட வேண்டாம். அதிகமாக வேலை வாங்கிவிட்டு ACR ல் கையெழுத்து போடும்போது இழுத்தடிக்கும் பிரின்சிபால் மீது கொலைவெறி கொள்ள வேண்டாம். மகன் பரிட்ச்சைக்கு படித்தானோ இல்லை வீடியோ கேம்ஸ் விளையாடிகொண்டு இருப்பானோ, மகள் எழுந்து சாப்பிட்டாளோ இன்னும் தூங்கிக்கொண்டு இருப்பாளோ ஆபீசில் இருந்துகொண்டு கவலை படவேண்டாம். எத்தனை எத்தனை வேண்டாம்கள். கொடுத்து வைத்த பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் . சாயந்திரம் 3pm மணிக்கும் 6 pm மணிக்கும் காலை சாப்பாடு சாப்பிடும் அவசியம் இருக்காது. ஆறிபோன டீ குடிக்கும் அவசியம் இருக்காது. காய்ந்து போன சப்பாத்தியும், நசத்து போன தோசை யும் நின்றுகொண்டே திணித்து கொண்டு ஓடும் நிலை இருக்காது. வீட்டை மட்டும் பார்த்து கொள், சொல்லும் ஆணுக்கு சிலை வைத்து கும்பிடலாம் என்று தோன்றுகிறது. நமது முன்னோர்கள் நன்றாக யோசித்தே பெண்ணை வீட்டில் வைத்து போற்றி பாதுகாத்தார்கள். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து வீட்டை அமைதியாகவும், அழகாகவும் பார்த்துக்கொண்டால் போதும் என்று நினைத்தார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் திருப்தியும் நிம்மதியும் கிடைக்காது என்று உணர்ந்து கிடைத்த சொற்ப சம்பளத்தில் சந்தோசமாக வாழ கற்றிருந்தார்கள். பாட்டனும் முப்பாட்டனும் புத்திசாலிகள். நம் அப்பாக்கள் அதிகமாய் யோசிக்கவில்லை. பெண் படித்தால் போதும், சம்பாதித்தால் போதும் சந்தோசமாய் இருப்பாள் என்று நினைத்துவிட்டார்கள். 

Wednesday 5 January 2022

பாசிட்டிவ் திங்க்கிங்

ரிப்போர்ட் கார்டில் " O " வை பார்த்து 0 மார்க் எடுத்திருக்கே? னு குரலை உசத்தினார் பாசிட்டிவ் திங்க்கிங் பற்றி க்ளாஸ் எடுப்பவர். அது அவுட்ஸ்டேன்டிங் என்று ஈனக்குரலில் முனகினார் நெகட்டிவ் பர்சன் என முத்திரை குத்தப்பட்டவர்.

Monday 15 November 2021

அப்பா


மூவர் உயிர் வளர்த்து
மூவாயிரம் மூளை வளர்த்து
மகனாய் மாண்பு வளர்த்து
தகப்பனாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தவித்து நின்றார்!

ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
காண முடியுமோ இனி
உம்மைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உம் பெருமை?


ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா

ஆசையாய் வளர்த்த மகன்
செட்டிநாட்டில் கொடிகட்ட
கடைசியாய் வந்த மகன்
கால்மேட்டில் காத்து நின்றார்

பூரணமும் கரையுமே
பரிமளமும் வாடுமே
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே

நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
யாரிடம் கேட்பேனோ?
கருத்தில் நீங்குமோ
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
பத்தாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?

காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றீரே
விம்முவது கேட்பீர்


இப்படிக்கு

ஈற்றும்
பேற்றும்

Saturday 30 October 2021

KASHMIRI DIDI

What is going inside you?

Are you  happy or sad or anger ?

Are you in desperate?

Why are you so silent?

Why are you not coming 

in whats app & facebook?

I have to share a lot on chat

Is sun shining?

Is business running??

Roads are vacant

No net, no phone

No news from yourside

Is everything normal?

Whatever it may be 

come out of kashmir

Are you all under house arrest?

Did you get medicine ?

Did you get napkin?

Did you get food?

Did your children go to school?

Did your children go to park?

Did your friend call from kolkata?

Did you share sweets on Diwali ?

Did you share sewaiyan on bakrid?

Did you invite poor for biryani?

Did you know noble prize winners?

I don't know about article 370

But why  it is ruining your life?

I have just 5 minutes to care

like other Indians

TV serial  is about to start

Bye kashmiri didi!

INDIA 9/11/19

Traffic Police


Traffic   Police
Feeling thirsty, need some water
Feeling hungry, need some food
Feeling tired, need some rest
sweating lot, need some wet
Stood for hours, need one chair
Roamed for hours, give me halt
I need to change my pads
I want to get freshen up
Do anyone can say 
Where is police convenience
Can anybody buy me pain pills?

Drunkun driver hit & ran away
I'm bleeding heavily and 
Seeing my own death slowly
Do I really a human or else?



Friday 29 October 2021

'இந்து'வின் கவலை

'இந்து'வின் கவலை 

ஆட்சிப்பணி
காவல் பணி
நீதிப்பணி
கல்விப்பணி
சங்கிகள் திணிப்பு,
முதல்வர் பேட்டி!
கவலை படர்ந்தது..... 

பள்ளி இடைவேளையில்
வேர்க்கடலை பகிர்ந்த
8ஆம் வகுப்பு தோழிகள்
யாஷ்மினும் ஜமீலாவும்
நினைவில்வந்தார்கள்!
2ரூபாய் கடலையை
பாதியாய் பகிர்ந்து
சாப்பிடுடீ என்றனர்
விடுதி சாப்பாடு
திண்ணியோ இல்லையோ
கவலைப்பட்டனர் 

பத்து வயது இஸ்லாம் சிறுமி
பலாத்காரம் என்று
பேப்பரில் படித்தபோது
ஈஸ்வரா, ஈஸ்வரா
அது யாஷ்மின் மகளாய்
ஜமீலாவின் மகளாய்
இருக்கக்கூடாதே!
'இந்து'வாய் கவலைப்பட்டேன் 

வாரச்சந்தையில் வாங்கிய
வள்ளிக்கிழங்கு சிப்ஸை
பகிர்ந்து கொண்ட நண்பன்
நிசார் நினைவில்
வந்துபோனான்
ஜெய் ஸ்ரீராம் சொல்
என்று குரல்வளை
நெரித்து கொலை
வலையொலி காணொளி
பதட்டத்துடன் தேடினேன்
அய்யோ அவனோ?
முகம் சிதைந்து 
செத்திருந்தான்!
'இந்து'வாய் நடுங்கினேன்


அலுவலகத்தில் இருந்து
திரும்பிய பொழுதில்
கீழ்வீட்டு தோழி
சாஹிதாவின் மடியில்
என் மகள் உறங்கினாள்
என்னாச்சு பதறினேன்
ஒன்றுமில்லை தேற்றினாள்
காலையில் நீ போனபின்
விளையாடும்போது
விழுந்துவிட்டாள்
மஞ்சள் கலந்து 
பால் தந்தேன்
பருகிவிட்டு உறங்குகிறாள்
நன்றிசொல்லி
கூட்டிவந்தேன் 

மாட்டுக்கறி இருந்ததென்று
கணவனையும் மகனையும்
கொடூரமாய் கொன்றனர்
செய்திபடித்து துடித்தேன்
கண்ணீரோடு பிரார்த்தனை
சாஹிதாவின் உறவாய்
இருக்கக்கூடாதென்று! 

இந்துவும் கவலையில்
இஸ்லாமியரும் கவலையில் 

இது இந்துராஷ்டரம்!
இல்லை இல்லை
திருத்ராஷ்டிரம்


இனப்படுகொலை
இலங்கையில் நேற்று
இந்தியாவில் இன்று



யாருக்காக தேசம்?
யாருக்கான தேசம்?


    -  தெய்வானை / இந்து

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...