Showing posts with label குறள் கவிதைகள். Show all posts
Showing posts with label குறள் கவிதைகள். Show all posts

Sunday, 14 January 2024

குறள் 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.  

பேச்சு : 

இனிய சொல்
தாழ்ந்த குரல்
இதயம் வெல்லும்!

பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலே புரிந்துகொள்ளாமலே முழு வாழ்க்கையை கழித்துவிடுகிறோம். நான் பேசினால் ஒரு பயல் கேட்பதில்லை என்பவர்கள் தங்கள் வார்த்தைகளை உற்று நோக்குங்கள். என் பேச்சிற்கு மரியாதை இல்லை என்பவர்கள் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள்.  சுடாத வார்த்தைகளா அவை?

Saturday, 30 December 2023

குறள்_1142 அலரறிவுறுத்தல்


களத்துமேடு
ஆற்றங்கரை
காவியம் பேசும் 
இடமானது
கண்மணியை
காணாது கலங்கும்
மனமறியாது
தங்கள் கற்பனை
வளர்த்தனர்
முற்றத்தில் முல்லைப்பூ
ஜாடைகாட்டி வைத்தேன்
நீ எடுத்து சூடும்முன்
ஊரெல்லாம் பரவியது
தேன்மிட்டாய்
பாதி கடித்து
படல்மீது வைத்தேன்
எறும்பும் பகையாகி
எல்லோரிடமும்
காட்டி கொடுத்தது


Sunday, 9 July 2023

குறள் 1307

விடுப்பில் வருகிறேன் என்ற
ராணுவ வீரனின் கடிதம்
மனைவியை மகிழ்ச்சி ஆக்கும்
அடுத்த நொடியில் மறையும் அவளது மகிழ்ச்சி
இரண்டு வாரங்களே
இருப்பார் என்ற செய்தி
இன்னும் அவளை துன்பப்படுத்தும்
அதுபோலவே ஊடலால்
பிரிந்த தலைவிக்கு
அடுத்துவரும் இன்பம்
நீடிக்காமல் போகுமோ என
எண்ணி வருந்துவாள்

குறள் 1308

நீலக்குறி பெறாத 
இதயம் பெறாத  
குறுஞ்செய்திகள்
சொன்னது உன் 
அன்பின் அளவை
சுடுசொல்லில் 
சாம்பலானேன்
நீ இதை அறியாய் 
இருந்தும் நான் 
வருந்துவதேன்?
உன் புன்னகை
என் ஆக்சிஜன்
தெரிந்தும் ஏன்
கஞ்சனாகினாய்?
உன்வாசலில் 
நான் வறியவளாய்
எவ்வளவுநாள் 
காத்திருப்பது?
வருந்(த்)துவதை அறியாயோ

Wednesday, 5 July 2023

குறள் 1304

ஊடல்களும் பிணக்குகளும்
ஏராளம் இங்கே
விளையாட்டு வீரர்கள்
வீதிவந்து பிணங்கினர்
விலைவாசி உயர்வுகண்டு
மக்கள் வீதிகளில்
பிணங்கினர்
இவர்களை உணராமல்
இவர்தம் ஊடல் களையாமல்
ஊர்சுற்றும் தலைவனே
நீ வெந்நீரை ஊற்றி
ஜனநாயக வேரை அறுக்கிறாய்
மணிப்பூர் மகளாக
மருகி உருகி சாகிறேன்

பிணக்கம் களைய வருவாயோ
இல்லை பிணங்கள் எண்ண வருவாயோ
அறியாத பிள்ளையாய்
அழுது கொண்டே கேட்கிறேன்
விரைந்து வா தலைவனே
என்னை வெறுப்பு தீ
விழுங்கும் முன்னே
உன் பாராமுகம்தானே
எனை அதிகமாக சுடுகிறது
வந்தே பாரத்தைவிட
நீ வராத பாரம் சுமக்கிறேன்
அமைதி கொள் ஆருயிரே என
ஒரு வார்த்தை சொல்லாயோ

Tuesday, 4 July 2023

குறள் 1302

பார்வைகள் வேறாக
கருத்துக்கள் முரண்பட
மூக்குக்கு மேல் கோபம்
இருவருக்கும்
இரண்டுநாள் மௌனமொழி
மூன்றாம்நாள் மாலையில்
காபியோடு பக்கோடா
டேபிள்மீது அவள் வைக்க
பிஸ்தா குல்பியை
லேப்டாப் மீது அவன் வைக்க
அத்தோடு முடிந்தது
அவர்களுக்கான ஊடல்
அளந்து போட்ட உப்பாக!

அரசியல் வேண்டாம்
அவன் சொல்ல
அதெல்லாம் முடியாது
இவள் சொல்ல
வாய்மொழி சூட்டின்
செல்சியஸ் குறைய
நான்குநாட்கள்
ஐந்தாம்நாள் வீட்டுக்கு
நண்பர் குடும்பம் வந்து நிற்க
சிக்கன் வாங்கி வரவா
மீன்வாங்கி வரவா
என்பதோடு ஊடல் முடிந்தது

அளவாக பெய்யும் மழை
அளவாக சுடும் சூரியன்
அளவாக குளிரும் நிலா
அளவான ஊடல் கலை
அத்தனையும் அழகு
அளவுக்குள் அடங்கிநின்றால்!
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு!

குறள் 1303

உரசிய தீக்குச்சி
உடனே அணைகிறது

ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது

எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது

ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா


தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்

அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை 
அவர்களை

இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....

Saturday, 3 June 2023

குறள் : 1290

எவ்வளவு தான் தாகமோ
எத்தனை நாள் காத்திருப்போ

எதிர்பாராத நேரத்தில்
இத்தனை முத்தம் தகுமோ
முத்தங்கள் யாவும்
ரத்த சிவப்பில் தந்தாளே

இழுத்து அணைத்ததில்
எலும்புகள் பலநூறாய் சிதற
தணித்துகொண்டாள் 
தன் தாகம் முழுதும் 

பேராசைக்காரி அந்த 
மரணதேவதை!

சண்டாளி பார்வையில்
அன்பே இல்லையே!

Saturday, 27 May 2023

குறள் 1283

வேலை இருக்கிறது என்று
பொழுதெல்லாம் சொல்லி
எனை புறக்கணிக்கிறான்

என் நலனில் அக்கறை 
குறைவாகவே வைக்கிறான்

ஆனாலும் அவன் மீதுள்ள அன்பு
நொடிக்கொருமுறை அவன்முகம் தேடி அலைகிறது.

இந்த கண்களுக்கு கொஞ்சமும்
நாணமில்லை.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மூளை சொல்லும்
அறிவுரையை கேளாது

அவன் வரும் வழிபார்த்து
தவமாய் தவம் கிடக்கிறது.

உப்பில்லாத கண்களோ
ரோசமே வருவதில்லை!

தவிக்கவிட்டு போனாலும்
வந்தவுடன் கண்டவுடன்

அவன் சிரிக்கும் ஒற்றை
புன்னகையில் 
அவன் தந்த அத்தனை

துன்பமும் மறந்து அவனை நோக்கி ஓடுகிறது

வெட்கமற்ற கண்கள்!

Thursday, 6 April 2023

குறள்: 1231


மேஜை எதிரே
ஆப்தமாலஜிஸ்ட்
கண்ணில் என்ன
பிரச்சினை கேட்டார்
முன்முற்ற புல்வெளி
கறுப்பாக தெரிகிறது
இடையிடையே சில
வெண்புல்லும்
தெரிகிறது என்றேன்
உங்கள் கண்களின்
கண்ணாடி சென்னையில்
இருக்கிறது
இன்டிகோவில்
வரவழைக்கிறேன்
சிரித்தபடி சொன்னார்

தோட்டத்து குண்டுமல்லியில்
கறுப்பு பாவையை
காணவில்லை என
காவலாளியை அழைத்து
என்ன காவல் செய்கிறாய்
மல்லியில் உள்ள பாவையை
யாரோ திருடி சென்றுவிட்டனர்
திட்டியதை வாங்கிக்கொண்டு
திருதிருவென முழித்தார்
கண்களில் தானே உண்டு
இவரென்ன மல்லியில்
தேடுகிறார் நினைத்தபடி
சரிம்மா இனிமேல்
ஒழுங்காக காவல்
செய்கிறேன் என
சொன்னபடி நகர்ந்தார்

ஃபுரூட் சாலட் செய்ய
கையில் ஆப்பிளை
எடுத்த கங்காவை
பார்த்துதோலை உரி
ரத்தம் வரப்போகிறது
என்று கத்தினேன்
அவளோ கன்னத்தையா
உரிக்கிறேன்
பழத்தை உரிக்க
ஏன் பதற்றப்படுகிறேன்
என கேட்டாள்
அவளிடம் சொல்லவில்லை
அது அவரின் கன்னம்
போல தெரிவதை!

என் கண்களுக்கு
என்னதான் ஆயிற்று
எதுவும் சரிவர
தெரியவில்லையே
யாரிடம் சொல்வது
எவரை கேட்பது?

Compliments: 

Friday, 24 March 2023

குறள் : 1219

கனவு இனிக்கும்
கண்டுபார் பெண்ணே

வங்கிக் கணக்கில்
லட்சங்கள் 
வந்ததாய்
கனவு காண்
இனிக்கும்

எரிவாயு விலை
நானூறு என்று
கனவு காண்
இனிக்கும்

பிரதமர் பதவியில்
அமரும் ராகுலுக்கு
முதல் மாலை
மோதி அணிவிப்பதாய்
கனவு காண்
இனிக்கும்

3% GDP வளர்ச்சியை
8% GDP வளர்ச்சியாய்
கனவுகண்டு சங்கிகள்
இன்புறுவதை போல

இரண்டு ஆண்டுகள்
சிறைதண்டனை
விதித்தால்
ராகுலின் வாயை
அடைத்துவிடலாம்
என கனவுகண்டு
இன்புறும்
ஆட்சியாளரைப்போல

ஒலிபெருக்கியை
சபையில் மறுத்தால்
ஒட்டுமொத்த
இந்தியாவும்
அமைதியாகும்
என்று கனவு காணும்
அற்பரை போல

உன் காதலர்
கனவில் வந்து
உனை கொஞ்சி
மகிழ்வதாய்
கனவு காண்
பேதைப்பெண்ணே

கனவில் நடப்பவை
ஒருநாள் நனவிலும்
நடக்கும் ஆகவே 
கனவு காண்!

Friday, 17 March 2023

குறள் 1212




விட்டால்போதும்
வாயாடிபேச்சு
தாங்கலை
என்றுதானே
வேலையை
காரணம்காட்டி
மாறுதல்
வாங்கி
போனேன் 
தூரமாக!

இப்போது
கனவில் வந்தாலும்
உன்துயர் சொல்லி
புலம்புவேன்
என்கிறாய்
நானெல்லாம்
வரமாட்டேன்
போடி.........
நீயாச்சு......
உன் புலம்பலாச்சு..
குறுஞ்செய்தி
அனுப்பினார்
காதலர்!

சோகங்கள் 😔😔😔

Tuesday, 14 March 2023

குறள் : 1209

உன்னிடம்
எதாவது நான்
பேசமாட்டேனா
என்று ஏங்கிய
காலம்  மறந்தாய்
என்னசொல்லி
பேச்சை
ஆரம்பிப்பது
என தினம்
ஒருவிதம்
தேடி பேசுவாய்
நீ பேசலனா
நாளே போகலடி
என்று புலம்புவாய்
குட் மார்னிங்
சொல்லவில்லை
என்று இரண்டுநாள்
மூஞ்சியை 
தூக்கிவைத்திருந்தாய்
எனை உன்
சுவாசக்காற்றென்றாய்
உன் காகிதத்தில்
எழுத்தாகும்
மை என்றாய்
உன்போனுக்கு
நான்தான்
தீராத சார்ஜ்
என்றாய்
மோதிஅதானி
உறவைக் காட்டிலும்
மேலான ஆழம்
நம் காதல்
என்று வக்கனை
பேசினாய்

அத்தனையும்
மறந்து எனை 
பித்தாக்கி
சுற்றவைத்தாய்!
உன்னை அளவற்று
நேசித்ததை தவிர
அப்படி என்னடா
தவறு செய்தேன்?

Sunday, 12 March 2023

குறள் : 1207

நின்னை
நினையாமல்
இருப்பதற்கும்
முடியாமல்
மறப்பதற்கும்
முடியாமல்
தள்ளாடி 
தவிப்பதற்கு 
பதிலாக 
நான் இல்லாமல்
போகவே 
முயற்சிப்பேன்
நினைவுகள்
கொல்வதற்கு
முன்னர்
நிஜத்தை
கொல்வது 
எளிதாக
படுகிறது.
காற்றிலாத
பலூன்
நீரிலாத
குளம்
நீலம் இலாத
வானம்
இருந்தால் என்ன
மறைந்தால் என்ன!

Saturday, 11 March 2023

குறள் :1206

கண்கள்
உறுதி செய்த
காதலை
வாய்மொழியில்
கொண்டுவர
தெரியாமல்
சம்பந்தமில்லாத
வார்த்தைகள்
கொண்டு
தொடங்கிய பேச்சு
'காபி வித் இந்துவா'
இன்றும் காலையில்
சொல்லி பார்க்கிறேன்

நீயும் பேச தெரியாமல்
கடைக்குபோறேன்
ஏதேனும் வேண்டுமா
கேட்டு முழித்தாய்
ஷாம்பு வாங்கிவா
சொன்னதும்
அதோடு சேர்த்து
டெய்ரி மில்க்கும்
வாங்கிவந்தாய்


எனை கேலிசெய்த
ஒருவனை கேள்விகேட்க
படைதிரட்டி சென்று
பயமுறுத்தி வந்தாய்

இப்படி எண்ணற்ற
இனியநினைவுகளால்
என் இன்றைய
வாழ்க்கை ஓடுகிறது

நீ இல்லைஎன்றாலும்
உன்நினைவுகள்
காற்றாகி நீராகி
எனை உயிர்ப்பித்து
கொண்டிருக்கின்றன

உன் வருகைக்காக
எனை காக்கவைக்கின்றன!

Friday, 10 March 2023

குறள் 1204



(சமையலறையில் நான். ஜன்னலில் பழுப்பி. காலை 7மணி)

பழுப்பி : மீமீ.... மியாவ்வ்.. யாயா?
நான் :  பாலூற்றும் மாமா ஊருக்கு போயிட்டார்

பழுப்பி : யாவ்மி... மமியாவ்..மிவ்யாயா?
நான்: எப்ப வருவார்னு சொல்லலைடி

பழுப்பி: மியாவ்..மியாவ்மியாவ். மிவ்வ்மி
நான்: என்னையே நினைச்சுக்குவாரா தெரியலை. இதுல உன் ஞாபகம் வருமானு வேற கேக்குறே. ஆசைதான்டி உனக்கு!

பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ்
நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா?
பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்!
நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.


Compliments : 

Wednesday, 8 March 2023

குறள் : 1201

காக்கைச் சிறகினிலே நந்தலாலா அவள் கருங்கூந்தல் தோன்றுதடா நந்தலாலா 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா அவள்
பச்சைநரம்புகள் தோன்றுதடா நந்தலாலா 
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா அவள்
குரலே இசைக்குதடா நந்தலாலா 
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா அவளை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

குறள் :1202

நீளும் நேரங்கள்
நினைவுகளால்
நிறைகிறது
கடக்கும் பாதைகள்
கடந்த பாதங்களை
கைகோர்த்து நடந்த
நிமிடங்களை
ஞாபகப்படுத்துகிறது
தொலைவில் கேட்கும்
ராகங்கள் எனக்காக
நீ பாடிய வரிகளை
நினைக்க வைக்கிறது
உடல் பிரிந்தால் என்ன
உள்ளம் சேர்ந்தால் 
போதாதா?
நினைவாலே
சிலைசெய்து
நித்தம் உனை
பூஜிக்கிறேன்!

compliments :

குறள்:1203

காதலர்
மோதி
தும்மல்
மூவரும் ஒன்று

ஒருவர்
நினைப்பது
போல் நடித்து
நினைக்காது
மறப்பார்

மற்றவர்
கொடுப்பது
போல் நடித்து
எடுத்துகொள்பவர்

4% அகவிலைப்படி தந்து
18% சேவை வரி பிடிப்பார்

தும்மல் வருவது
போல நடித்து
வராமல் துன்புறுத்தும்

ஆக மூவரும் 
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்!

Sunday, 5 March 2023

குறள் : 1200

இரக்கமே இல்லாத
தலைவனிடம்
சிலிண்டர் விலை
அம்பது ரூபாய்
ஏற்றியது ஏன்
என கேட்பது 
செவிடன் காதில்
ஊதிய சங்குபோல!

அப்படித்தான்
இருக்கிறது
ஆசையே இல்லாத
ஆடவனிடம்
அன்பை எதிர்பார்ப்பது
கடலை தூர்ப்பது
போல கடினமானது!

நான் என்ன
வேட்பாளரா
கைகூப்பி
வணங்கி
அன்பு ஓட்டு
கேட்டுவாங்க?

Comments :

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...