Wednesday, 28 February 2024

ஊடல்

பேரன்பு மழைக்கு ஏங்கும் மலரவள்
பெருவெற்றி பெருவெள்ளத்திற்கு தகிக்கும் தடாகம் நான்
சூழியல் இடர்க்கீடே கரையும் காலம்,
சில குரல் ஒலிகளும்
ஊடூடே கேளிக்கை  சித்திரஓவிங்களாய்
சில நேரம் மட்டும் அன்பு பரிவர்த்தனைகள் நடந்தேற
ஊடல்கள் சபையேறும் நேரம் இது
துயிலடையா கனவுகள் கரைசேர்க்கும் வரை

காதலிக்க நேரமில்லை

அறிவதுமில்லை,
தெரிவதுமில்லை,
புரிவதுமில்லை !
சில பயண துயரங்கள் !
முகப்பு முல்லைகளின்,
வாசங்கள் தெரிவதில்லை,
முற்றத்து கீத ஒலிகேட்பதில்லை,
சாளரத்து தென்றல் உணர்வதில்லை !
விடிவதும், பொழுது சாய்வதும்,
விழிப்பதும், துயில்வதுமாக,
வாழ்க்கை பயணங்கள் !
கண்மூடினால் இலக்குகள்,
கண்விழித்தால் கடமைகள்,
இடையே பயணங்கள்,
இதில் எனக்கும்,
எனக்கானவருக்கும் ,
நேரம் கிடைக்குமா ?

உறவை போல்,
நானும் ஏங்கி நிற்கிறேன்❤️❤️ !

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...