Saturday, 11 May 2024

சாரி

சாரி சொன்னேன்
பதிலில்லை

புரிந்துகொண்டேன்
கோபம் என! 

சுகந்தம்

அழைப்பும்
பார்வையும்
மின்சாரம்!
எனக்காக
வந்ததுபோல்
உள்ளுணர்வு

உண்மையா என
உன்னிடம் 
நெருங்கும்போது
கேட்கிறேன்.
ஆம் என்று 
சொல்லிவிடு
அதற்காக ஆசைப்படுகிறேன்

தயாராகி வந்தேன்
உன்னில் கலந்துவிட
தயக்கம் வந்து
தலைதூக்க
தள்ளி அமர்ந்து
திரும்பிவந்தேன்

எண்ணங்களை 
திருடி ஆராயவேண்டும்
என்ன நினைத்தாய் என

ஏற்பாயா
தவிர்ப்பாயா

எப்போது வருவாய்
எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறேன் 



குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...