Wednesday, 17 November 2021

பாஞ்சாலி

இல்லை என்று சொல்லாத
     தரும சிந்தனை(தருமன்)
கொண்ட நோக்கத்தில்
    தெளிவான அறிவு(அர்ச்சுனன்)
எதிரில் நிற்போரை
   வெல்லும் உடல்வலிமை(பீமன்)
வயிர்வழி உயிர் தொட
   சமையலில் புலமை(நகுலன்)
எதிர்காலத்தை கணிக்கும்
   துல்லிய திறமை(சகாதேவன்) 

ஐந்து குணத்தையும் மணப்போர்
    வாழ்வில் சிறப்பர்
பெண்ணை துயில் உரிக்க
    காத்திருக்கும் சபையில்
கிருஷ்ணர் வந்தாலும்
    வராவிட்டாலும்
கௌரவர் மத்தியில்
    எப்போதும் ஜெயிப்பர்

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...