Tuesday, 19 April 2022

கனிமொழி


கனிந்த மொழி தமிழை 
உரசி பார்த்த காயை
ஆத்மநிர்பர் வரலை
தமிழிழே பேசவா என
கனிந்தமொழியால்
வடக்கன் வாயை 
மூடச்செய்த 
இனிய மொழியாள் 

தமிழ் வளர்த்த தந்தை
இனம் காக்கும் தனயன்
பெரியாரின் நீதி
வழிமொழிந்த பாடங்கள்
கசடற கற்று தேர்ந்து
சரியான நேரத்தில்
தெளிவான கணை தொடுத்து
பாராளுமன்றத்தில் 
போராடும் மொழியாள் 

வடக்குக்கு வாரிக்கொடுத்து
தெற்கிற்கு கிள்ளிக்கொடுத்து
வஞ்சம் செய்தல் சரியோ
மையத்தை சாடி
துவைத்து தொங்க விடும்
பொங்கும் மொழியாள் 

விளிம்புநிலை மனிதனே
எப்போதும் குற்றவாளி 
எண்ணுகிற மாயை
ஏன் என கேட்கும்
மூது மூளையுள்ள
கனன்ற மொழியாள் 

தோப்போடு இருந்தாலும்
தனித்துவமிக்க மரமாக
வாழவும் வளரவும்
தாகத்தோடு நீர் தேடும்
ஆணி வேர் தாவரம்!


அக்கா என அழைக்கவா
அம்மா என அழைக்கவா
மேதகு என அழைக்கவா
குழப்பத்தில் பின்தொடர்வோர் 

பெண்ணாய் வெல்க !
விண்ணை தொடுக! 

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...