Saturday, 17 September 2022

கோபம்

#கோபம்

நேரில் அமர்ந்து
பேசவில்லை
தேடிவந்தேன்
தள்ளிவிட்டாய்
கூட்டம் கூட்டி
திட்டி தீர்த்தாய்
கொன்றுவிடுவேன்
ஆவேசம் காட்டினாய்
எனக்கு தெரிந்ததை
செய்தேன் பேசினேன்
உனக்கு ஏனோ
புரியவில்லை
பிடிக்கவில்லை
எனை துண்டுகளாக
சிதறச்செய்தாய்
ஆனந்தம் பிரபா
அதையும்  ஏற்கிறேன்.
நாளை என்மகன்
தடுமாறும்போது
வழிகாட்டவேணும்
அன்பு செய் அவனிடம்
என்மீதான கோபம்
என்னோடு போகட்டும்
     இப்படிக்கு
     ராஜீவ்காந்தி

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...