Saturday 17 September 2022

சிறுத்தைப்பா

சிறுத்தைப்பா

வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா
இனம் தனை காக்கவா
மானம் தனை போற்றவா
கல்விகொண்டு உயரவா
கேள்விகேட்டு துளைக்கவா
சிறுமை கண்டு பொங்கவா
சிறுத்தையே சீறிவா

கூட்டமாய்  காவல் செய்
காட்டமாய் கோபம் செய்
தாய்தங்கை காத்திட
சகோதரன் வாழ்ந்திட
சமத்துவம் தழைத்திட
சமூகநீதி ஓங்கிட
சுற்றுசூழல் போற்றிட
சுரண்டலை ஒழித்திட
வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா

உணவால் பிரியோம்
உணர்வால் பிரியோம்
சாதியால் பிரியோம்
வேதத்தால் பிரியோம்
அற்பரால் வீழோம்
ஆரியத்தால் அழியோம்

S.Deivanai

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...