Sunday, 13 November 2022

குறள்_1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்,நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களம் வெல்லும்
என் வலிமை
உன் நெற்றிக்களம்
நோக்கி நடுங்குவதேன்
பகைவனின் பரந்த
களம் காட்டிலும்
உன் நுதல்களம்
சிறிதுதானே
கேசங்கள் ஒவ்வொன்றும்
உனைகாக்க போரிடுமோ
கிட்டவரும் ஆடவரை
சூரியகண்கள் எரித்திடுமோ
வலிமைமிகு என் கைகள்
வழுக்கி விழுந்து
உடைந்திடுமோ
இத்தனை மென்மை 
ஏன் வைத்தாய்

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...