Saturday 24 December 2022

குறள்_1129: இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே,ஏதிலர் என்னும்இவ் வூர்.

இமைகள்
மூடினால்
அவருக்கு
உறுத்தும்
என நினைத்து
இமைக்காமல்
இருந்தேன்
வெளிச்சம்
கிடைக்காமல்
பூக்களை
பார்க்காமல்
நதியை
ரசிக்காமல்
அலைகளை
காணாமல்
கஷ்டப்படுவாரே
அதற்காக
விழித்தேன்
அவர் என்ன
கடுங்காவல்
கைதியா
காற்றோட்டமில்லாத
அறையில்
பூட்டிவைக்க
அதனால்
இமைக்காமல்
இருந்தேன்!
இந்த ஊரார்
அதுபுரியாமல்
என்னை
தூங்கவிடாமல்
கொடுமை
செய்வதாக
அவரிடம் 
வம்பு பேசலாமா?

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...