Wednesday, 25 January 2023

குறள் 1160

நடந்து வருவாயா
படுத்து வருவாயா
நானொனறும் 
அறியேன்!
மகன் முகம்
பார்ப்பாயா
மண்ணுக்குள்
புதைவாயா
நானொன்றும்
அறியேன்!
வீரக்கதைகள்
நீ சொல்லக்கேட்டு
புளகாங்கிதம்
அடைவானா 
நம்மகன்
நடக்குமா இது
நானறியேன்
கண் அறுவை
செய்த அம்மா 
மருத்துவமனையில்
அப்பா கால்ஒடிந்து
வீட்டு வராண்டாவில்
அறிந்தாலும்
வரமாட்டாய்
அறிவேன் நான்
நீயில்லா சுமையும்
நீவிட்டுப்போன சுமையும்
கண்ணீரோடு
சுமப்பேன்
கவலையில்லை
ஆனால்.....
வந்துட்டேன்டி
கண்ணம்மா
என்று சொல்ல
திரும்பிவருவாய்
என்ற வரம் தந்து
பிரிந்துசெல்
மன்னவனே!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...