Wednesday 25 January 2023

குறள் 1160

நடந்து வருவாயா
படுத்து வருவாயா
நானொனறும் 
அறியேன்!
மகன் முகம்
பார்ப்பாயா
மண்ணுக்குள்
புதைவாயா
நானொன்றும்
அறியேன்!
வீரக்கதைகள்
நீ சொல்லக்கேட்டு
புளகாங்கிதம்
அடைவானா 
நம்மகன்
நடக்குமா இது
நானறியேன்
கண் அறுவை
செய்த அம்மா 
மருத்துவமனையில்
அப்பா கால்ஒடிந்து
வீட்டு வராண்டாவில்
அறிந்தாலும்
வரமாட்டாய்
அறிவேன் நான்
நீயில்லா சுமையும்
நீவிட்டுப்போன சுமையும்
கண்ணீரோடு
சுமப்பேன்
கவலையில்லை
ஆனால்.....
வந்துட்டேன்டி
கண்ணம்மா
என்று சொல்ல
திரும்பிவருவாய்
என்ற வரம் தந்து
பிரிந்துசெல்
மன்னவனே!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...