Sunday, 29 January 2023

குறள் 1165

இரண்டு நாட்கள்
எதிர்பாரா பிரிவு
என்னாச்சு
எங்கே போனே
உடல்நலம் சரியா
உள்ளநலம் சரியா
சாப்பிட்டாயா
தூங்கினாயா
ஏனையோர் நலமா
நூறுகேள்வி கேட்டாச்சு
பதில் ஒன்றும்
வரவில்லை
எரிச்சல் வந்தது
கோபம் வந்தது
ஏமாற்றம் வந்தது
தற்காலிகபிரிவே
இத்தனை துன்பம்
என்றால்
நிரந்தரப்பிரிவில்
நான் சப்தமின்றி
சாவேனோ?

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...