Thursday, 2 February 2023

குறள்:1168

இரவும் நானும்
இணைபிரிந்த 
தோழிகள்!
அவளுக்கு
என்னைவிட்டால்
உறவொன்றும்
இல்லை!
ஆதலால்
இரவோடு
உறவாடி
கவலைகளை
போக்கிக்கொள்கிறேன்!
நிலாமகன்
மாதம் ஒருமுறைதான்
சந்திக்க வருகிறானாம்
இரவு குறைபட்டுகொண்டாள்!
என்னவனும்
அப்படித்தான்
ஆடிக்கொருதரம்
அமாவாசைக்கொருதரம்
வருகிறான்!

Comments:

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...