Friday, 17 February 2023

குறள் 1184

நொடிகளை
விழுங்கும்
சுறா மீன்
உன் நினைவுகள் 

அலையாய்
முன்னும்
பின்னும்
வந்து
என் மூளையை
தொட்டுச்செல்கிறது
உன் வதனமும்
வேடிக்கை பேச்சும்! 

பேசுவதெல்லாம்
உன் குணங்களை
போற்றித்தான்
அஞ்சாதவன்
அசராதவன்
அழகானவன்
நேர்மையானவன்!

இதற்கு பரிசாக
உன்னையே
தராமல்
பசலையை
ஏன் தந்தாய்?

Comments received:

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...