Friday 17 February 2023

குறள் 1184

நொடிகளை
விழுங்கும்
சுறா மீன்
உன் நினைவுகள் 

அலையாய்
முன்னும்
பின்னும்
வந்து
என் மூளையை
தொட்டுச்செல்கிறது
உன் வதனமும்
வேடிக்கை பேச்சும்! 

பேசுவதெல்லாம்
உன் குணங்களை
போற்றித்தான்
அஞ்சாதவன்
அசராதவன்
அழகானவன்
நேர்மையானவன்!

இதற்கு பரிசாக
உன்னையே
தராமல்
பசலையை
ஏன் தந்தாய்?

Comments received:

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...