Wednesday, 8 March 2023

குறள் :1202

நீளும் நேரங்கள்
நினைவுகளால்
நிறைகிறது
கடக்கும் பாதைகள்
கடந்த பாதங்களை
கைகோர்த்து நடந்த
நிமிடங்களை
ஞாபகப்படுத்துகிறது
தொலைவில் கேட்கும்
ராகங்கள் எனக்காக
நீ பாடிய வரிகளை
நினைக்க வைக்கிறது
உடல் பிரிந்தால் என்ன
உள்ளம் சேர்ந்தால் 
போதாதா?
நினைவாலே
சிலைசெய்து
நித்தம் உனை
பூஜிக்கிறேன்!

compliments :

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...