Saturday 16 December 2023

தூரம்

வெந்நீர்
சூப்பு
ரசம்
கிச்சடி
மருந்து
எதுவும்
தரமுடியாது

அருகில்
அமர்ந்து
தலைகோத
முடியாது

மூலையில்
படுக்கையில்
ஒற்றையில்
எங்கோ நீ
கிடக்கையில்

உறவென
நானிருந்து
என்ன பயன்?

காற்றென
ஒலியென
ஒளியென
பாய்ந்துவர
வழியின்றி

வெற்று
வார்த்தைகளால்
வருடுவதால்
உன் வலி குறையுமோ?

இல்லை
என் வலிதான்
குறையுமோ?

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...