Monday, 26 August 2024

சிவாஜி

இந்தியாவின் 
இறையாண்மையை
காக்க முடியாத நான்

இந்தியப் பெண்களை
காக்க முடியாத நான்
 
வாளிருந்தும்
வீரமிருந்தும்
வாய்மூடி கண்மூடி
வாழும் நிலை
வந்ததே எனக்கு

சிலையாய்
வாழ்வதும்
ஒரு வாழ்வா

அதற்குபதில் 
இறந்தால் என்ன
என நினைத்து
உச்சியில் இருந்து குதித்து 
உயிர்விட்டாரோ சிவாஜி?

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...