Saturday 30 October 2021

EMPTY

EMPTY



நீ வந்து போனபின்

வீடு முழுக்க பரவியிருக்கும் வெறுமையை விவரிக்க

வார்த்தைகள் தேடுகிறேன்

நீ அமரும் இடம் காலியாக!

மகளின் மீதான புலம்பல்கள்

மகனின் மீதான பீத்தல்கள்

கேட்க காது காத்திருக்க,

பேசும் வாயை காணோம்!

ஓசையின்றி மூவரும்

அவரவர் உலகில்

ஆளுக்கொரு மூலையில்!

மறுபடியும் மூன்று டம்ளர்

மூன்று தட்டு மூன்று மூலை!

விடியல் வேறு வேலை வேறு

உறங்கும்  பொழுது வேறு

உணவு வேறு உணர்வு வேறு

உறவாடும் உதடு  வேறு

புன்னகைக்க காரணம் வேறு

டேக்ஸி தெருமுனையை

தாண்டியும் தாண்டாமல்

ஹெட்செட் கேட்டு பிடிவாதம்!

வீட்டில் நுழைந்த நொடியில்

மகனின் கையில் டீவியும் போனும்!

நீண்ட பெருமூச்சு எனக்குள்!

எப்போது முடியுமோ உன் பயணம்?

எப்போது  தொடங்குமோ

நம் வாழ்க்கை ??

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...