Wednesday 24 November 2021

தோழிக்கு கடிதம் -3

தோழிக்கு கடிதம் -3


அன்புள்ள தோழி
தினமும் பூக்கும் இத்தனை பூக்களை என்ன செய்கிறாய்? சாமிக்கு சாத்தி வாடிய மலர்கள், தலையில் சூடி வாடிய மலர்கள், வேஸில் வைத்து வாடிய மலர்கள் அனைத்திற்கும் மறுவாழ்வு தரவேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?. வாடிய மலர்கள் அத்தனையும் சேர்த்துவைத்து காம்புநீக்கி காயவைத்து, வேலையில்லாத நேரங்களில் மிகவும் 'போர'டிக்கும்போது மிக்ஸி யில் அரைத்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக்கி மெல்லிய ஈர்க்குச்சியை சுற்றி கைகளால் உருட்டவும். இதை நிழலில் உலர்த்தி பாலித்தினில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று குச்சிகள் உன் வீட்டு அறைகளை வாசப்படுத்தும். உன் உழைப்பில் உருவான ஊதுவத்திகளுக்கு இன்னும் வாசனை கூடும். நீ மிகவும் Busy என்றால் உன்னைச்சுற்றி இருக்கும் இன்னொருவருக்கு வாய்ப்பை கொடு. மலருக்கும் இன்னொரு மனிதருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.

பிரியங்களுடன்
தெய்வானை

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...