Sunday, 21 November 2021

அளவும் காலமும்

பசிக்கும்போது 
       கொடுக்காத பாலும்
பசிக்காதபோது 
       கொடுக்கும் பாலும் வீணே!! 

தேவையான நேரத்தில் 
       கிடைக்காத பாராட்டும்
தேவையில்லா நேரத்தில் 
       கிடைக்கும் பாராட்டும் வீணே 

நேரத்தில் கிடைக்காத நீதி
     நேரமாகி கிடைத்த நீதி 
வாதியைப் பொருத்தவரை
      இரண்டும் வீணே! 

மனம் விரும்பாத நேரத்தில்
     ஒலிக்கும் இசையும்
மனம் விரும்பும் நேரத்தில்
     கேட்கும் சத்தமும் வீணே

ஐந்து வருடம் உழைத்தவனுக்கு
     ஆயுளுக்கும் ஊதியமும்
ஐம்பது வருடம் உழுதவனுக்கு
     ஐந்து ரூபாய் எலிமருந்தும் வீணே

உடலே அசைக்காதவனுக்கு
      உணவுவகை ஐந்தாறும்
ஓடி ஓடி உழைத்தவனுக்கு
      ஒரு பிடி சோறும் மோரும் வீணே

அளவும் காலமும்
      மிகமிக அவசியம்
அளவு மிஞ்சினால்
      வேலையில்லை என்பர்
காலம் கடந்தால்
      தேவையில்லை என்பர்

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...