Sunday, 14 November 2021

அன்பளிப்பு

அன்பை அள்ளி அள்ளி
அளித்தனர்
அலங்காரங்களாய்
அன்னமாய் இனிப்பாய்
இன்முகத்துடன்
இன்னபிறவும் வந்தன
இருபது வருடங்களுக்கும்
மொத்தமாய் சேர்த்து
மொய் எழுதினர்
வராத திருமணத்திற்கு
வட்டியாய் சேர்த்து
உள்ளம் மட்டுமா நிறைந்தது?
இல்லை கண்களும் கூட
சொல்லித் தீருமோ
மனம் படும் பாட்டை !!!
நிலைத்திடவேண்டும்
நீடூழீ நட்பு! !!

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...