Sunday 14 November 2021

எங்கடீ போனீக

எங்கடீ போனீக
ஒருத்திய கூட காணோம் 

மழை பேஞ்சு
கம்பம் சரிஞ்ச 
சேதி கேட்டு போனியோ
மந்திரி வாரானு
மாலை வாங்க போனியோ
கடலூரு வாக்கப்பட்ட
கரண்ட் ஆபிஸரம்மா 

இன்போசிஸ் லெச்சுமிய
பொழுதிறங்கியும் காணல
திண்டுக்கல்லு போனவ
இன்னுமா திரும்பல
வழில எங்கனவும்
சோட்டுப்பொண்ண கண்டியோ
நலம் விசாரிக்க நின்னியோ 

பெங்களூரு சலிச்சுதுனு
பூனா போன பொண்ணே
பூரியும் பாவ் பாஜியும்
புளிச்சு போகலயா இன்னும்? 

புள்ள மார்க் என்னாச்சு
துப்பு சொல்லு யோகு
நமக்கெல்லாம் ஊசி
போடுமா இல்லையா 
ஐஸ்இட்லி தாரேனு
போங்கு காட்டிபோனவ
அக்சென்டர தவிர
அத்தனையும் மறந்துபோனா!

வத்தக்குழம்பு வச்சு
வெண்டக்கா பொரிய வச்சு
வயிறு நெறைய தந்தவ !
சிங்கப்பூரு தாண்டி
மலேசியா போனாளோ
லோகேஷ பாத்து வர! 

எங்கடீ போனீக
ஒருத்தியகூட காணோம் 

கவுசிக்கு ஊறுகா 
கடன் குடுக்க போனவ
தக்காளீ வாங்கிட்டு
இன்னுமா திரும்பல?
மேலாண்மை படிக்கிறேனு
மேகத்தோடு பறந்தவ
இன்னுமா இறங்கல 

ஒரு சேதிய காணோம் 

வேல செஞ்சு மாளல னு
நெஞ்சு பொருமனவ
கால நீட்டி  உக்கார
நேரம் இன்னும் வரலையா! 

வீடு முழுக்க பூவு வச்சு
வீதி முழுக்க வாசம்
வண்டு தேடி வந்துருச்சு
செனட் டோட சேதி காணோம் 

அந்தமானு அழகு னு
அங்கனயே தங்குனவ
மழையும் புயலும்
வந்தாலும் 
மதுர வர மறுக்குறா

ஏன் எப்படி எதுக்கு எங்கே
நூறு கேள்வி கேட்ட கிளி
பணி சுமையா மன சுமையா
பல நாளா கேள்வி காணோம்

படமெல்லாம் ஒன்னு சேத்து
பலசுவையா தந்த புள்ள
பாட்டு மாத்தி மாட்டுனவ
ஏபிசி ஜூஸு போட
ஆப்பிள் வாங்க போனாளோ

எங்கடீ போனீக
ஒருத்திய கூட காணோம்


2 comments:

  1. அருமை தெய்வானை.அசத்தல் கவிதை

    ReplyDelete
  2. Dr.Kulasekharan Narasingamurthi6 December 2021 at 23:22

    Super kavidhai Deivanai... vaalthukkal

    ReplyDelete

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...