Monday 15 November 2021

அப்பா


மூவர் உயிர் வளர்த்து
மூவாயிரம் மூளை வளர்த்து
மகனாய் மாண்பு வளர்த்து
தகப்பனாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தவித்து நின்றார்!

ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
காண முடியுமோ இனி
உம்மைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உம் பெருமை?


ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா

ஆசையாய் வளர்த்த மகன்
செட்டிநாட்டில் கொடிகட்ட
கடைசியாய் வந்த மகன்
கால்மேட்டில் காத்து நின்றார்

பூரணமும் கரையுமே
பரிமளமும் வாடுமே
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே

நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
யாரிடம் கேட்பேனோ?
கருத்தில் நீங்குமோ
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
பத்தாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?

காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றீரே
விம்முவது கேட்பீர்


இப்படிக்கு

ஈற்றும்
பேற்றும்

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...