Tuesday, 16 November 2021

மரணத்தை வென்றார் உண்டோ


இருநூறு வருடங்கள்
     வாழ்ந்தவர் உண்டோ
உடைந்து நிற்கும்
     அரண்மணைகள் சாட்சி
உலகையே ஆண்ட
      அலெக்சாண்டர் சாட்சி
உத்திரமேரூர் 
      கல்வெட்டு சாட்சி
உள்ளூரில் வாழ்ந்து கெட்ட
      ஜெயா அம்மா சாட்சி
வந்தவரெல்லாம் தங்கினால்
        வருவோருக்கு இடமேது
போவோரெல்லாம்
        மீண்டும் வருவர்
உருமாறி உறவுமாறி
        மகனாய் மகளாய்
பேரனாய் பேத்தியாய்!!
      
  
இருப்பு இறப்பு
       இரண்டும் நிலையில்லை
சாவும் சோகம்
        சாகா வரமும் சோகம் 
இயற்கையிடம் தோற்றுவிடு
        இயன்றவரை வாழ்ந்துவிடு 
மனதை மடைமாற்று
        மயக்கம் தெளிந்துவிடும்

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...