Friday 13 May 2022

சாடல் மழை

பாடுபொருள் யாரென
பதரே உனை  கேட்பேனோ
தாமரை நேசனே
மல்லி வாசம் அறிவாயோ
சேற்றில் மலர்பவருக்கு
செருக்கு எதற்கு
அதைசெய் இதைசெய்
அதை தவிர் இதை தவிர்
திணிப்பவருக்கு தெரியுமோ
திண்பவனின் உணர்வு
நான் என்ன செய்யவேண்டும்
ஆணையிட நீ அண்ணணா
மூடனே மூளை வளர் 

சமூகநீதி கொண்டாடும்
சமகால திராவிடரே
சமநீதி அறிவாயோ
கருத்து மாற்றுக்கருத்து
எல்லோருக்கும் இடமுண்டு
என் தோட்ட மலர் மணம் பேச
உன் செவியில் புகை ஏன்
கண்ணியம் யாதென
கனிமொழியாரை கேள்
நா கட்டுப்பாடு யாதென
முதல்வரை கேள்
எதையும் தாங்கும் இதயம்
யாதென அறிய
அறிவாலய நூலகத்தில்
அப்பப்போ நுழைந்து பார்
திராவிட பாசறை
பயிலரங்கம் சென்று பார்
எதுவுமே படிக்காமல்
எப்படி நீ திராவிடன்?

No comments:

Post a Comment

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...