Saturday, 26 November 2022

#குறள்_1101# குறள்: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்,ஒண்தொடி கண்ணே உள.

கடல் அழகு மலை அழகு என்பர்
காதலி உனைக் காணாதோர்!
குழல் இனிது யாழ் இனிது என்பர்
கண்ணே உன் குரல் கேளாதோர்
மல்லிகைக்கு வாசம் உன்
தலைசேர்ந்த பின்புதான்
ஜிலேபி உன் எச்சில்பட்டபின்
அதிகமாய் இனித்தது
உன் மெய்யே பேரின்பம்
உலகத்துக்கே சொல்லிவைப்பேன்!

நிலம் உன் உடல்
நீர் உன் கண்கள்
காற்று உன் சுவாசம்
ஆகாயம் உன் கூந்தல்
நெருப்பாய் உன் நினைவுகள்
என் ஐம்பூதங்களும் நீ!

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...