Saturday, 26 November 2022

#குறள்_1101# குறள்: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்,ஒண்தொடி கண்ணே உள.

கடல் அழகு மலை அழகு என்பர்
காதலி உனைக் காணாதோர்!
குழல் இனிது யாழ் இனிது என்பர்
கண்ணே உன் குரல் கேளாதோர்
மல்லிகைக்கு வாசம் உன்
தலைசேர்ந்த பின்புதான்
ஜிலேபி உன் எச்சில்பட்டபின்
அதிகமாய் இனித்தது
உன் மெய்யே பேரின்பம்
உலகத்துக்கே சொல்லிவைப்பேன்!

நிலம் உன் உடல்
நீர் உன் கண்கள்
காற்று உன் சுவாசம்
ஆகாயம் உன் கூந்தல்
நெருப்பாய் உன் நினைவுகள்
என் ஐம்பூதங்களும் நீ!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...