Monday, 7 November 2022

#குறள்_1081 (அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் ) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை,மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

மழை கண்டு ஆடும்
மயிலின் அசைவும்
மாதுவின் காதோரம்
காதணியின் அசைவும்
வாக்கு கேட்பதேன்?
ஓருள்ளம் உள்ள நான்
யாரை தேர்ந்தெடுப்பேன்!
மயில் அழகு என்றால்
மாது மனம் வாடாதா
மாதுவே அழகு என்றால்
மயில் தோகை சுருங்குமே
பாப்பையா கொஞ்சம்
தீர்ப்பு சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...