Monday, 7 November 2022

#குறள்_1081 (அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் ) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை,மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

மழை கண்டு ஆடும்
மயிலின் அசைவும்
மாதுவின் காதோரம்
காதணியின் அசைவும்
வாக்கு கேட்பதேன்?
ஓருள்ளம் உள்ள நான்
யாரை தேர்ந்தெடுப்பேன்!
மயில் அழகு என்றால்
மாது மனம் வாடாதா
மாதுவே அழகு என்றால்
மயில் தோகை சுருங்குமே
பாப்பையா கொஞ்சம்
தீர்ப்பு சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...