Thursday 29 September 2022

என் அன்பு தோழமையே


காலை முதல் கலக்கம்
உன்னுடனான நட்பை
தவறாக சித்தரித்து
அலுவலகம் வரை
வந்துவிடுவார்களோ
விசில்ப்ளோயருக்கும்
அரசியல் விமர்சகருக்கும்
சிறைப்பட்ட குற்றவாளிக்கும்
விரிவுரையாளருக்கும்
என்ன சம்பந்தம்
ஏன் நின்றாய் துணையாய்
ஏன் பகிர்ந்தாய் நட்பை
கேள்விகளால் துளைப்பாரோ
தண்டனை விதிப்பாரோ
கலக்கத்தில் காலைமுதல்
என் செய்வேன் நான்?
குடும்பத்தில் குழப்பம் வரும்
அலுவலில் சிரமம் வரும்
எப்படி எதிர்கொள்வேன்
'அப்படித்தான்' சொல்வேனோ
உன்னைப்போல் துணிவாய்
மன்னியுங்கள் சொல்வேனோ
சாவர்க்கர் சங்கியைப்போல்
குழப்பத்தில் நான்
கணவர் எப்படி பேசுவார்
சகவிரிவுரையாளர்கள்
என்ன சொல்வர்
யோசித்து யோசித்து
திகிலில் கிடக்கிறேன்
துணிவானவருடன்
துணை நிற்பதில்
இத்தனை பதட்டம் வருமா
ஆச்சர்யமாக இருக்கிறது
புத்தகங்கள் அனுப்புவது
புனிதமாகவும் ஆகலாம்
குற்றமாகவும் மாறலாம்
அறுதியிட்டு சொல்லலாகாது
இருப்பினும் தொடர்கிறேன்
கமலின் வசனத்தோடு
........த்தா  பார்த்துக்கலாம்!


Note: சோச்சா நஹீ அச்சா புரா
          தேக்கா சுனா குச் பீ நஹீ
          மாங்கா குதா ஸே ராத் தின்
          தேரே ஸிவா குச் பீ நஹீ

பாட்டு மூன்றுமுறை கேட்டேன். இதமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...