Thursday, 24 November 2022

வரவேற்பு

போர்கண்ட சிங்கமே
வருக வருக
வாழும் பாரதியே
வருக வருக
கொள்ளையரை எதிர்க்கும்
பகத்சிங்கே வருக

பாழடைந்த கிராமத்துவீட்டை
பட்டணத்து பேரன்
பார்வையிட போனதுபோல
வெள்ளையரை எதிர்த்த
பாட்டன்கள் வாழ்ந்தவீட்டை
கடலூர் சிறையை
கொள்ளையரை எதிர்க்கும்
பேரன் நீ பார்க்கபோனாயோ
65 நாட்கள் அடைபட்டு
ஆசி  வாங்கிவந்தாயோ

வெள்ளுடை வேந்தன்
வெண்தாடி வீரன்
பெரியாரின் வாரிசாய்
நீதிமன்ற வாசலில்
நிற்க கண்டேன்
நீதிகேட்டு போனாயா
இல்லை
நீதித்துறைக்கே பாடம்
புகட்ட போனாயா

மதுரை மன்ற நீதிதேவதை
மெதுவாக கிசுகிசுத்தாள்
சட்டம் படிக்காமல்
இத்தனை பேசுகிறானே
சட்டம் படித்திருந்தால்
நீதிதராசை என்னிடம்
இருந்து பிடிங்கியிருப்பான்
அவளின் பாராட்டு
நீதியரசர்களுக்கு
பொறாமையை தந்திருக்கும்
அதனாலோ என்னவோ
உனக்கெதிராய் நீதிவழங்கினர்

I standby what I said
இந்த சொல்லாடல்
மந்திரமானது
இளைஞர்கள்மனதில்
சொக்கித்தான் போனார்கள்
சொல்வேந்தன் துணிவு கண்டு!

மன்னிப்புகேட்கமறுத்து
பிடிவாதமாய் நின்றது
மக்களின் மனதில்
மன்னனாக வைத்தது

மதத்தால் சிதறுண்ட
இந்தியாவை இணைக்க
ராகுல்காந்தி என்ற
ஒற்றைசொல்
போதுமானதாய்
இருப்பது போல
இடத்தால் சிதறுண்ட
எங்களை இணைக்க
சவுக்குசங்கர் என்றபெயர்
போதுமானதாய் இருந்தது
பெயரே தெரியாமல்
முகமே அறியாமல்
மனதால் இணைந்து
அண்ணனாக அக்காவாக
தம்பியாக தங்கையாக
வாராவாரம் உன் புகழ்
மறவாது பாடினோம்
ஒவ்வொருவர் குரலிலும்
உன் பெயரே ஒலித்தது
இடையில் சில உபிக்கள்
மிதிபட்டும் சென்றனர்

Any updates any updates
எல்லோர் DM லும் ஒரே கேள்வி
எப்ப வரார் எப்ப வரார்
எல்லோர் வாயிலும்
இதே கேள்வி
அவர் நலமா அவர் நலமா
அனைவரும் கவலைப்பட்டனர்
உன்னைநோக்கி உலகையே
சுழல வைத்தாய்
Twitter ல் Trendingஆய்
உன் பெயரே மிதந்தது

எங்கள் மனதை
ஆட்டிபடைத்த
மந்திரக்காரன் நீ 
மாயக்கண்ணன் நீ

அலிபாபாவும் 40 திருடர்களும்
மறுபடியும் புகழ்பெற்றது

நிலசுரண்டல் நிதிசுரண்டல்
நீதிசுரண்டல் அனைத்துக்கும் எதிராய்
உன் கர்ஜனை தொடரட்டும்
வளரட்டும் உன் ஆயுள்
வாழட்டும் உன் புகழ்










No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...