Tuesday 6 December 2022

#குறள்_1111# நலம்புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்,மென்னீரள் யாம்வீழ் பவள்.

மென்மையும்
வண்ணமும்
உனக்கு தான்
என்றெண்ணி
கர்வம் கொள்ளாதே
அனிச்சமே!
உன்னை வெல்லும்
மென்மை
என்னவளின்
உதட்டிற்கு உண்டு!
அவளின்
கருநீல கண்
தங்கநிற தோள்
தும்பை பல்
விடவா உன்
வண்ணம் அழகு
உன் ஐந்திதழை
காட்டிலும்
அவளின்
செவ்விதழே
சிறந்தது!
கர்வத்தை
குறைத்து
என்னவளை
துதி பாடு!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...