Wednesday, 14 December 2022

#குறள்_1129 :மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்,பலர்காணத் தோன்றல் மதி. 

இந்தாம்மா
நிலாப்பொண்ணு
இது ஒரு மூஞ்சினு
தூக்கிட்டு
மாசத்துல
பதினஞ்சுநாள்
வந்து நிக்கிற
உனக்கெல்லா
வெக்கமே
இல்லியா
என்னிக்காச்சும்
எம்பொஞ்சாதி
மூஞ்சி பாத்துக்கீறே?
அல்லிபூ கண்ணழகி
ஆவாரம்பூ  நிறத்தழகி
அவ இருக்கும்போது
வெளியில வரலாமா
ஓடிப்போ வூட்டுக்குள்ள
ஈனமானம்
உனக்கிருந்தா!

No comments:

Post a Comment

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...