Wednesday, 14 December 2022

#குறள்_1129 :மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்,பலர்காணத் தோன்றல் மதி. 

இந்தாம்மா
நிலாப்பொண்ணு
இது ஒரு மூஞ்சினு
தூக்கிட்டு
மாசத்துல
பதினஞ்சுநாள்
வந்து நிக்கிற
உனக்கெல்லா
வெக்கமே
இல்லியா
என்னிக்காச்சும்
எம்பொஞ்சாதி
மூஞ்சி பாத்துக்கீறே?
அல்லிபூ கண்ணழகி
ஆவாரம்பூ  நிறத்தழகி
அவ இருக்கும்போது
வெளியில வரலாமா
ஓடிப்போ வூட்டுக்குள்ள
ஈனமானம்
உனக்கிருந்தா!

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...