Wednesday, 14 December 2022

#குறள்_1129 :மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்,பலர்காணத் தோன்றல் மதி. 

இந்தாம்மா
நிலாப்பொண்ணு
இது ஒரு மூஞ்சினு
தூக்கிட்டு
மாசத்துல
பதினஞ்சுநாள்
வந்து நிக்கிற
உனக்கெல்லா
வெக்கமே
இல்லியா
என்னிக்காச்சும்
எம்பொஞ்சாதி
மூஞ்சி பாத்துக்கீறே?
அல்லிபூ கண்ணழகி
ஆவாரம்பூ  நிறத்தழகி
அவ இருக்கும்போது
வெளியில வரலாமா
ஓடிப்போ வூட்டுக்குள்ள
ஈனமானம்
உனக்கிருந்தா!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...