Wednesday, 11 January 2023

குறள் : 1147

ஏச்சு எருவாக
போட்டு
பேச்சு நீராக
ஊற்றி
வளர்க்கிறேன்
ஒரு செடி!
கருகுமா
வளருமா
காலம் சொல்லும்
கண்ணே
கூப்பிட்ட வாய்
சனியனே
என்றது
மை டார்லிங்
சொன்ன இதயம்
மயிராய்
நினைத்தது
கண்கள்
குளமானாலும்
கண்ணனை
விடமுடியவில்லை
இருப்பதா
இறப்பதா
காலன் சொல்லட்டும்!

Comments : 

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...