Wednesday, 11 January 2023

குறள் : 1147

ஏச்சு எருவாக
போட்டு
பேச்சு நீராக
ஊற்றி
வளர்க்கிறேன்
ஒரு செடி!
கருகுமா
வளருமா
காலம் சொல்லும்
கண்ணே
கூப்பிட்ட வாய்
சனியனே
என்றது
மை டார்லிங்
சொன்ன இதயம்
மயிராய்
நினைத்தது
கண்கள்
குளமானாலும்
கண்ணனை
விடமுடியவில்லை
இருப்பதா
இறப்பதா
காலன் சொல்லட்டும்!

Comments : 

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...