Monday, 16 January 2023

குறள் 1152

கண்ணாடி ஜாரில்
கண்ட மிட்டாய்
கையில் கிடைத்து
தின்றபோது
தீர்ந்துவிடுமோ
கவலை போல!

விலை உயர்ந்த
சரக்கை விருந்தில்
குடிக்கும் ஏழை
அடுத்து எப்போ
வாய்க்குமோ என
கவலைபடுவது போல

அத்தான் தரும்
இன்பங்கள்
அடுத்தநாள்
தொடராதே என
சேரும்போதும்
கலங்கினாள்
Otherwise
தைரியசாலி!
Comments : 

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...