Sunday 22 January 2023

குறள் 1158


கரோனா வந்து
ஆளுக்கொரு
மூலையில்
சுருண்டுவிழ
சுடுதண்ணீர்
வேண்டுமா
சாப்பாடு
வேண்டுமா
மருந்து
வாங்கிவரவா
காய்ச்சல்
குறைந்ததா
ஆக்சிஜன்
கிடைத்ததா
கேட்க நாதியில்லை
அயலூரில்
வாழ்வோருக்கு!


கல்யாண பந்தியில்
கேசரி சாப்பிட்டு
பலவருடம் ஆனது
குலதெய்வ
கோவிலில்
கிடா விருந்து
வந்தபோது
தேர்வுகள்
குறுக்கே வந்து
விருந்து தவறியது

தகப்பனுக்கு
நலக்குறைவு
சென்றுபார்க்க
இயவில்லை
..........
இனமில்லா நகரில்
சொந்தமில்லா  ஊரில்
வாழ்வது கடினம்தான்
ஆனால் அதைவிட
கடினம் அன்பர்
இல்லா வாழ்வு......



No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...