Saturday, 4 February 2023

குறள் : 1171

கண்கள் 
என்ன பெண்பாலா?
பின்விளைவு
அறியாமல்
காதலித்துவிட்டு
பின்னர்
கண்ணீரும்
உகுப்பதேன்?
பெண்புத்தி போல
கண்புத்தியும்
பின்புத்தி தானோ?
விதை ஒன்று 
போட்டால்
சுரை ஒன்றா 
முளைக்கும்
இதுகூட 
அறியாத
அறிவிலியா
கண்கள்?
இன்பத்திற்குப்பின்
துன்பம்
அறியாயோ கண்ணே?
நீ என்ன 
மக்குப்பெண்ணா?

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...