Saturday, 25 February 2023

குறள் 1192

அரிசியும் கோழியும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
பிரியாணி போல

தேயிலையும்
ஏலக்காயும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
தேநீர் போல

கடலைமாவும்
சர்க்கரையும்
சந்திப்பதால்
கிடைக்கும்
மைசூர்பாக் போல

அவனும் அவளும்
சந்தித்து இன்புறுதல்
வானம் பார்த்த
பூமிக்கு கிடைத்த
மழையாக இருக்கிறது

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...