Sunday, 26 February 2023

குறள் : 1193


இலையுதிர்காலத்தில்
இலையிழந்து
களையிழந்து
பிரிவால் வாடும்
மரங்களே
ஆணிவேர்
இருப்பதை
மறந்தீரோ
அடுத்த பருவத்தில்
துளிர்விட்டு
செழிக்கவைக்க
நானிருப்பதை
வேர் இருப்பதை
வேர் என
காதல் இருப்பதை
மறந்தீரோ
காதலினால்
மீண்டும்
சேர்வோம்
பிரிவு தற்காலிகமான
பருவநிலை தானே
காத்திருந்து
காதலிப்போம்!

வெயில்காலத்தில்
வறண்டுபோன
குளத்தைகண்டு
கலங்கமாட்டேன்
அடுத்து வருகிறதே
மழைக்காலம்
நிரம்பிவழியும்
நீரில் நான்
இன்பமாக 
மிதந்திருப்பேன்
வெயிலும் மழையும்
இயற்கையெனில்
பிரிவும் சேர்வும்
இயற்கைதானே
பிரிவுக்காக நான்
வருந்தபோவதில்லை
வரப்போகும்
இன்பமழைக்காக
காதலோடு
காத்திருப்பேன்!

அரியணையில்
அமரமுடியாமல்
அடுத்தடுத்து
தோற்றாலும்
மக்கள் மீது
கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில்
வெல்லவைக்கும்
காதலர் பிரிவும்
அப்படித்தான்
அவர்மீது வைத்த
நம்பிக்கை
அடுத்த வருடத்தில்
இணைந்திட 
வழிவகுக்கும்.
தேர்தலில் தோல்வியும்
காதலரின் பிரிவும்
நிரந்தரமானதல்ல!

Comments : 

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...