Tuesday, 28 February 2023

குறள் 1195

என் பொழுதின்
பாதிகளை
உன்னோடு
கழிக்கிறேன்
நிமிடங்கள்
கூட கழிவதில்லை
நீயின்றி
உன் நினைவின்றி
வேலைகளை
தள்ளிவைத்து
உன்னை
கைகளில் ஏந்தி
சீராட்டுகிறேன்
ஆனால் பதிலுக்கு
நீ தருவது
என்னவோ
தலைவலியும்
தூக்கமின்மையும்
என்மீது உனக்கு
அன்பே இல்லையா
அக்கறையே இல்லையா
இதயமில்லாத போனே!

Comments : 

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...