Tuesday 28 February 2023

குறள் 1195

என் பொழுதின்
பாதிகளை
உன்னோடு
கழிக்கிறேன்
நிமிடங்கள்
கூட கழிவதில்லை
நீயின்றி
உன் நினைவின்றி
வேலைகளை
தள்ளிவைத்து
உன்னை
கைகளில் ஏந்தி
சீராட்டுகிறேன்
ஆனால் பதிலுக்கு
நீ தருவது
என்னவோ
தலைவலியும்
தூக்கமின்மையும்
என்மீது உனக்கு
அன்பே இல்லையா
அக்கறையே இல்லையா
இதயமில்லாத போனே!

Comments : 

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...