Sunday 12 March 2023

குறள் : 1207

நின்னை
நினையாமல்
இருப்பதற்கும்
முடியாமல்
மறப்பதற்கும்
முடியாமல்
தள்ளாடி 
தவிப்பதற்கு 
பதிலாக 
நான் இல்லாமல்
போகவே 
முயற்சிப்பேன்
நினைவுகள்
கொல்வதற்கு
முன்னர்
நிஜத்தை
கொல்வது 
எளிதாக
படுகிறது.
காற்றிலாத
பலூன்
நீரிலாத
குளம்
நீலம் இலாத
வானம்
இருந்தால் என்ன
மறைந்தால் என்ன!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...