Sunday, 12 March 2023

குறள் : 1207

நின்னை
நினையாமல்
இருப்பதற்கும்
முடியாமல்
மறப்பதற்கும்
முடியாமல்
தள்ளாடி 
தவிப்பதற்கு 
பதிலாக 
நான் இல்லாமல்
போகவே 
முயற்சிப்பேன்
நினைவுகள்
கொல்வதற்கு
முன்னர்
நிஜத்தை
கொல்வது 
எளிதாக
படுகிறது.
காற்றிலாத
பலூன்
நீரிலாத
குளம்
நீலம் இலாத
வானம்
இருந்தால் என்ன
மறைந்தால் என்ன!

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...