Tuesday, 14 March 2023

குறள் : 1209

உன்னிடம்
எதாவது நான்
பேசமாட்டேனா
என்று ஏங்கிய
காலம்  மறந்தாய்
என்னசொல்லி
பேச்சை
ஆரம்பிப்பது
என தினம்
ஒருவிதம்
தேடி பேசுவாய்
நீ பேசலனா
நாளே போகலடி
என்று புலம்புவாய்
குட் மார்னிங்
சொல்லவில்லை
என்று இரண்டுநாள்
மூஞ்சியை 
தூக்கிவைத்திருந்தாய்
எனை உன்
சுவாசக்காற்றென்றாய்
உன் காகிதத்தில்
எழுத்தாகும்
மை என்றாய்
உன்போனுக்கு
நான்தான்
தீராத சார்ஜ்
என்றாய்
மோதிஅதானி
உறவைக் காட்டிலும்
மேலான ஆழம்
நம் காதல்
என்று வக்கனை
பேசினாய்

அத்தனையும்
மறந்து எனை 
பித்தாக்கி
சுற்றவைத்தாய்!
உன்னை அளவற்று
நேசித்ததை தவிர
அப்படி என்னடா
தவறு செய்தேன்?

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...