Sunday, 9 July 2023

குறள் 1308

நீலக்குறி பெறாத 
இதயம் பெறாத  
குறுஞ்செய்திகள்
சொன்னது உன் 
அன்பின் அளவை
சுடுசொல்லில் 
சாம்பலானேன்
நீ இதை அறியாய் 
இருந்தும் நான் 
வருந்துவதேன்?
உன் புன்னகை
என் ஆக்சிஜன்
தெரிந்தும் ஏன்
கஞ்சனாகினாய்?
உன்வாசலில் 
நான் வறியவளாய்
எவ்வளவுநாள் 
காத்திருப்பது?
வருந்(த்)துவதை அறியாயோ

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...