Wednesday, 5 July 2023

குறள் 1304

ஊடல்களும் பிணக்குகளும்
ஏராளம் இங்கே
விளையாட்டு வீரர்கள்
வீதிவந்து பிணங்கினர்
விலைவாசி உயர்வுகண்டு
மக்கள் வீதிகளில்
பிணங்கினர்
இவர்களை உணராமல்
இவர்தம் ஊடல் களையாமல்
ஊர்சுற்றும் தலைவனே
நீ வெந்நீரை ஊற்றி
ஜனநாயக வேரை அறுக்கிறாய்
மணிப்பூர் மகளாக
மருகி உருகி சாகிறேன்

பிணக்கம் களைய வருவாயோ
இல்லை பிணங்கள் எண்ண வருவாயோ
அறியாத பிள்ளையாய்
அழுது கொண்டே கேட்கிறேன்
விரைந்து வா தலைவனே
என்னை வெறுப்பு தீ
விழுங்கும் முன்னே
உன் பாராமுகம்தானே
எனை அதிகமாக சுடுகிறது
வந்தே பாரத்தைவிட
நீ வராத பாரம் சுமக்கிறேன்
அமைதி கொள் ஆருயிரே என
ஒரு வார்த்தை சொல்லாயோ

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...