Thursday 23 November 2023

அரவணைப்பு

தீஞ்ச்சொல் ஈட்டியை,
பொறுமை கேடயம் தடுக்கும் !
காலம் மருந்திட்டு,
அருகாமை தணிக்கும் !
கடும் கோடை,
வசந்ததிற்கு முன்வாயில்,
காரிருள்,
அதிகாலையின் முகப்பு !
இடிமின்னல்,
பேரன்பு மழைக்கு அடிநாதம் !
காலம் வரும்,
கவலைகள் தீரும்,
தோள் சாய்ந்து,
சுகம் பேசி,
வெண்ணிலவு செல்வோம் !

No comments:

Post a Comment

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!