Friday, 24 November 2023

யாரோவின் ஒருவன்

புயலில் 
ஆணிவேர் 

வெயிலில்
வேப்பமரம்

குளிரில்
கம்பளி

அவன்!

அழுகையில்
ஆறுதல்

தடுமாற்றத்தில்
தாங்கும் கை

சலிக்கையில்
நம்பிக்கை

அவன்!

நான் படிக்கும்
புத்தகம் அவன்!

என்னை எழுதும்
பேனா அவன்!

சிரிப்பின் 
காரணம் 
அவன்!

கோபத்தின்
வடிகால் 
அவன்!

யாரவன்?

யாரோ ஒருவன்!


No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...