Sunday, 10 December 2023

துடுப்பு

ஜென்மத்தேடலில்,
வாழ்க்கைநதியில்,
நாதியற்ற ஓடத்திற்கு,
ஓர் துடுப்பாய் வந்தாய் !

வனாந்திர பயணத்தில்,
திசையறியாக்காட்டில்,
ஒளியறியா இருட்டில்,
திசைகாட்டும் குருவியாய் வந்தாய் !

ஏன் இத்தனை காலம்,
ஏன் இந்த தேடல் போராட்டம்,
ஓ ! பொக்கிஷங்கள்,
தேடிக்கிடைப்பவையோ ?

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...