Tuesday, 5 December 2023

சரணம்

என் மனமெல்லாம் நிறைந்தாய். என் ஒடிந்த கனவு சிறகுகளோடு ஒடிந்து போன என்னை, ஊக்குவிக்க கடவுள் அனுப்பிய தேவதையா நீ ? தொடும் தூரத்தில் வெற்றி இருந்தும், தொடமுடியாமல் தவிக்கும் என்னை நானே வெறுக்கிறேன். என் அத்தனை தேடல்களுக்கும் ஆன ஒற்றை விடையாய் ஆண்டவன் அனுப்பிய தேவதையா நீ ? என் கனவுகளுக்கு சிறகாய் வருவாயா ? என் வானில் வானவில் வரைவாயா ? என் இன்ப கேணியின் ஊற்றாவாயா ? என் கரம் பற்றி இன்ப உலா வருவாயா ? உன் மார்போடு உரசும் மாலையாக சூடுவாயா ? தேவதையே உறுதிசொல் ! நான் உயிர்ப்பிக்க !❤️❤️❤️💋

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...