நெடுந்தூர நடையும்
சுடும் வெயிலும் கூட
சுகமாகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹
மனதை வதைக்கும்
சோகங்களும் மதியை
மறைக்கும் சிந்தைகளும்
சீராகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹
என்னத்தின் சிதறல்களும்
ஏக்கங்களின் பிளிரல்களும்
இதம் காணுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹
விடியாதிருந்த இரவுகளும்
விடை தேடிய இருள்களும்
வெளிச்சம் பெருகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹
நீ இல்லா நேரமும் கூட
உன் நினைவுகளால்
இனிமையாகுது..
நெஞ்சமும் உனை
நினைத்து இசைத்து பாடுது... 🌹
No comments:
Post a Comment